கிணத்துக்கடவு அருகே நாய் குறுக்கே வந்ததால் விபத்து - அதிமுக நிர்வாகி உயிரிழந்த சோகம்!

கோவை கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையம் பிரிவில் சென்ற இருசக்கர வாகனத்தின் குறுக்கே நாய் வந்ததால், கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பு கம்பி மீது மோதிய விபத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் உயிரிழந்தார்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிணத்துக்கடவு அடுத்த திரு.வி.க வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (62). இவர் அதிமுக கட்சியில் கிணத்துக்கடவு பேரூராட்சி 5-வது வார்டு கிளைத் தலைவராக உள்ளார்.

இவருக்கு ஈஸ்வரி (52)என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், கிருஷ்ணகுமார் நேற்று மாலை கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையம் பிரிவு பகுதியில் கோவை - பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் இருசக்கர வாகனத்தில்தனது நண்பர் ரமேசுடன் சென்றுள்ளார்.

இருசக்கர வாகனத்தை கிருஷ்ணகுமார் ஓட்டிச் சென்ற நிலையில், திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது. அப்போது, நாயின் மீது இருசக்கர வாகனம் மோதிய நிலையில், கிருஷ்ணகுமார் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.



விழுந்த வேகத்தில் சாலையோரத்தில் இருந்த இரும்பு தடுப்பு கம்பியில் மோதியதில் படுகாயமடைந்த கிருஷ்ணகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் பயணித்த ரமேஷ் சாதாரண காயத்துடன் உயிர் தப்பினார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிணத்துக்கடவு போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...