தாராபுரம் அருகே சாலையோர கடைகளில் முறைகேடாக ஆக்கிரமிப்பு கட்டணம் வசூல் - விவசாயிகள் சங்கம் புகார்

தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் சாலையோர கடைகள் வைத்துள்ளவர்களிடம் முறைகேடாக ஆக்கிரமிப்பு கட்டணம் வசூலித்த நபர்களை கைது செய்யக்கோரி, கோட்டாட்சியரிடம் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மனு.


திருப்பூர்: தாராபுரம் - பொள்ளாச்சி சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளவர்களிடம் முறைகேடாக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.



தாராபுரம் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் உட்பட பத்துக்கு மேற்பட்ட நிர்வாகிகள் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் இன்று புகார் மனு ஒன்றை வழங்கினர்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பொள்ளாச்சி சாலையில் நகராட்சி மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.

இந்நிலையில், பள்ளிக்கு அருகே சாலையை ஆக்கிரமித்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சுமார் 50க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து நடவடிக்க எடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் தொலைபேசி மூலம் புகார் அளித்த நிலையில், அதுகுறித்து தமக்கு எதுவும் தெரியாது எனக்கூறிவிட்டு, யாரிடம் வேண்டுமானாலும் சென்று சொல்லுங்கள் என பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளார்.

நகராட்சி ஆணையாளரின் செயல் மற்றும் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாலையோர கடைகளில் நாள்தோறும் ஆக்கிரமிப்பு கட்டணமாக 100 ரூபாய் வசூல் செய்வது யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் அளிக்க சென்ற தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுப்பிரமணியம் நகர தலைவர் ராசு, உழவர் உழைப்பாளர் கட்சியின் மாவட்ட தலைவர் அலங்கியம் ஈஸ்வரமூர்த்தி உட்பட சங்கத்தின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...