மேட்டுப்பாளையம் அருகே பேருந்தை வழிமறித்த காட்டுயானைகள் - அச்சத்தில் உறைந்த பயணிகள்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வெள்ளியங்காடு மஞ்சூர் சாலையில் காட்டு யானைகள் அரசு பேருந்தை திடீரென வழிமறித்ததால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர்.



கோவை: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திற்குச் செல்ல கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காடு வழியாக மஞ்சூர் சாலை ஒன்று உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் பயணிக்கும் இந்த பகுதியில், 30க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் மற்றும் பில்லூர் அணையும் உள்ளது.

மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு இது மூன்றாவது வழியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில், அங்குள்ள மக்களின் பயன்பாட்டிற்காக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கோவையில் இருந்து வெள்ளியங்காடு மஞ்சூர் சாலை வழியாக பில்லூர் அணைக்கு சென்ற அரசு பேருந்து ஒன்றினை காட்டு யானைகள் கூட்டம் திடீரென வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இரண்டு குட்டிகளுடன் இருந்த ஐந்து காட்டு யானைகள் கூட்டம் திடீரென சாலைக்கு வந்து அரசு பேருந்தை வழிமறித்து சாலையின் நடுவே நின்றதால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.



இதனால், அடுத்தடுத்து பின்னால் வந்த வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. வெகுநேரம் பேருந்தினை முன்னேறி செல்ல விடாமல் சாலையிலேயே நடமாடிய யானைகள், பின்னர் வெகுநேரம் கழித்து காட்டுக்குள் சென்றன.



இதையடுத்து, மீண்டும் பேருந்து புறப்பட்டு சென்றது. சாலையின் நடுவே யானைக்கூட்டம் வழிமறித்து நின்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...