கோவையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாலைநேர சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடக்கம்

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பள்ளிகளில்‌ மாலை நேர சிறப்பு வகுப்புகளில்‌ பங்கேற்கும்‌ 10, 11, 12-ம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு மாலை நேரச்‌ சிற்றுண்டி வழங்கும்‌ நிகழ்வினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப்‌ ஆகியோர்‌ தொடங்கி வைத்தனர்‌.


கோவை: கோவை மாநகராட்சியில் உள்ள 28 அரசுப் பள்ளிகளில் மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌. 19-க்குட்பட்ட மணியகாரம்பாளையம்‌ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்‌ 10, 11, 12ஆம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவ, மாணவியர்களுக்கு மார்ச்‌, ஏப்ரல்‌ 2023-ல்‌ நடைபெறவுள்ளது.

அரசு பொதுத்‌ தோ்வுகளை எதிர்கொள்ளத் தயார்‌ செய்யும்‌ பொருட்டு மாலை நேர சிறப்பு வகுப்புகளில்‌ பங்கேற்கும்‌ 5,608 மாணவ, மாணவியர்களுக்கு மாலை நேரச்‌ சிற்றுண்டி வழங்கும்‌ நிகழ்வினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ தொடங்கி வைத்தனர்‌.



இந்நிகழ்ச்சியில்‌ வடக்கு மண்டல தலைவர்‌ வே.கதாரவேல்‌, மாநகராட்சி கல்வி அலுவலர்‌ ஜி.மரிய செல்வம்‌, உதவி ஆணையர்‌ மோகனசுந்தரி, மற்றும்‌ பள்ளி ஆசிரியாகள்‌ மற்றும்‌ மாணவ, மாணவியர்கள்‌ கலந்து கொண்டனர்‌.



மணியகாரம்பாளையம்‌ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள்‌ மாநில அளவில்‌ நடைபெற்ற பள்ளி கலைத் திருவிழாவில்‌ கலந்து கொண்டு பிறவகை குழு நடனத்தில்‌ பங்கேற்று முதலிடம்‌ பிடித்து வெற்றி பெற்றமைக்கான பாராட்டுச்‌ சான்றிதழ்களை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ வழங்கினார்கள்‌.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...