விடுதி பெண்களிடம் சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் தொந்தரவு - கோவை விடுதிகள் உரிமையாளர்கள் குற்றச்சாட்டு!

சரக்கு மற்றும் சேவை வரி சோதனை என்ற பெயரில் அலுவலர்கள், விடுதிகளில் உள்ள பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் ஏற்றுக்கொள்வதாக இல்லை என்று கோயமுத்தூர் தனியார் விடுதிகள் உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு.



கோவை: கோயமுத்தூர் தனியார் விடுதிகள் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.



அவர்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

தங்கும் விடுதிகளில் சரக்கு மற்றும் சேவை வரி பிரிவினரால் ரெய்டு செய்யப்பட்டு பெரிய தொகை வரியாக செலுத்த கட்டாயப்படுத்தி உள்ளனர். அந்த அலுவலர்கள் கேட்கும் வரியானது ஹோட்டல்களுக்கு உண்டானது. மாறாக அதனை விடுதிகளுக்கும் சேர்த்து தர சொல்லுவது வருத்தத்திற்குரிய செயலாக கருதுகிறோம்.

ரெய்டு என்ற பெயரில் தங்கள் அலுவலர்கள் எங்களிடமும் தங்கியுள்ள பெண்களிடமும் நடந்து கொள்ளும் விதம் ஏற்றுகொள்வதாக இல்லை. எனவே ஆண்கள்/ பெண்கள் தங்கும் விடுதிகளுக்கு வரி வசூலிப்பதை உடனடியாக மாவட்ட ஆட்சியர் தடை செய்ய வேண்டும்.

ரெய்டை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும், சரக்கு மற்றும் சேவை வரிகள் பொருந்தும் பட்சத்தில் அதை உரிய விளக்கத்துடன் எங்களுக்கு தெரியப்படுத்தி வழி காட்ட வேண்டும், இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டும் வரை கால அவகாசம் வழங்க வேண்டும்.



இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மேலும் மனுவின் நகல்களை முதலமைச்சர், மத்திய நிதி அமைச்சர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர், வணிகவரித்துறை ஆணையாளர் ஆகியவர்களுக்கு அனுப்பி உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...