திருப்பூரில் மன அழுத்தத்தை குறைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி - அரசு மருத்துவமனை நோயாளிகள் பங்கேற்பு!

திருப்பூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், 'நலமுடன் நோயாளிகள் வாழ நாலு வரிகள்’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: இந்திய மருந்துவ சங்கத்தின் திருப்பூர் கிளை சார்பில், திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில், ‘நலமுடன் நோயாளிகள் வாழ நாலு வரிகள்’எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இந்திய மருத்துவ சங்க திருப்பூர் கிளை தலைவர் சரோஜா நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். டாக்டர் ரவிச்சந்திரன், டாக்டர் அருள்ஜோதி, சங்க செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர்.



‘ஒண்டர்புல் நம்பிகை’மையம் சார்பில், நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்கள் மருத்துவமனையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், நோயாளிகளுக்கு, தங்களுக்கு இருக்கும் நோய் குறித்த பயத்தை எப்படி போக்குவது என்பது தொடர்பான அறிவுரைகளும் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.



இதில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏராளமான நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கலந்துகொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் நிறைவாக மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...