கோவையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.21 லட்சம் மோசடி - ஆறு பேர் கைது

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.21 லட்சத்தை மோசடி செய்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கும்பல், வேலை வாங்கி தருவதாக பலரையும் ஏமாற்றியது விசாரணையில் அம்பலம்.


கோவை: கோவையில் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி போலி நியமன ஆணை வழங்கி பலரை ஏமாற்றிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன் (56). இவர் தன் மகளுக்கு அரசு வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காந்திராஜ் மகன் சரவணக்குமார் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.

சரவணகுமார், நான் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறேன் என்றும், இந்து சமய அறநிலையத் துறையில் அரசு வேலை வாங்கித் தருகிறேன் எனவும் கூறியுள்ளார்.

இதற்காக தன் கூட்டாளிகளான ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஜவகர் பிரசாத் (29), தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அன்பு பிரசாத் (39), தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சரவணக்குமார் (33), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (33), பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுரேந்திரன் (34) மற்றும் சுதாகர் (37) ஆகிய நபர்களுடன் இணைந்து சந்தான கிருஷ்ணனிடம் இருந்து மட்டும் ரூ. 21 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு பணி நியமன ஆணை வழங்கியுள்ளார். சிறிது நாளிலேயே அது போலி ஆணை என்று தெரியவந்துள்ளது.

இந்த மோசடி குறித்து சந்தான கிருஷ்ணன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், மாவட்ட குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மூன்று தனிப்படைகள் அமைத்து மோசடி செய்த நபர்களை தேடி வந்தனர்.

நேற்று சரவணகுமார் உட்பட 6 பேரையும் போலீஸ் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமானோரை ஏமாற்றி, கோடிக்கணக்கில் வசூல் வேட்டை நடத்தியது தெரியவந்துள்ளது.

இதேபோல, அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக யாராவது கூறினால் பொதுமக்கள் யாரும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கோவை காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...