கோவையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.21 லட்சம் மோசடி - ஆறு பேர் கைது

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.21 லட்சத்தை மோசடி செய்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கும்பல், வேலை வாங்கி தருவதாக பலரையும் ஏமாற்றியது விசாரணையில் அம்பலம்.


கோவை: கோவையில் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி போலி நியமன ஆணை வழங்கி பலரை ஏமாற்றிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன் (56). இவர் தன் மகளுக்கு அரசு வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காந்திராஜ் மகன் சரவணக்குமார் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.

சரவணகுமார், நான் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறேன் என்றும், இந்து சமய அறநிலையத் துறையில் அரசு வேலை வாங்கித் தருகிறேன் எனவும் கூறியுள்ளார்.

இதற்காக தன் கூட்டாளிகளான ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஜவகர் பிரசாத் (29), தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அன்பு பிரசாத் (39), தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சரவணக்குமார் (33), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (33), பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சுரேந்திரன் (34) மற்றும் சுதாகர் (37) ஆகிய நபர்களுடன் இணைந்து சந்தான கிருஷ்ணனிடம் இருந்து மட்டும் ரூ. 21 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு பணி நியமன ஆணை வழங்கியுள்ளார். சிறிது நாளிலேயே அது போலி ஆணை என்று தெரியவந்துள்ளது.

இந்த மோசடி குறித்து சந்தான கிருஷ்ணன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், மாவட்ட குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மூன்று தனிப்படைகள் அமைத்து மோசடி செய்த நபர்களை தேடி வந்தனர்.

நேற்று சரவணகுமார் உட்பட 6 பேரையும் போலீஸ் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமானோரை ஏமாற்றி, கோடிக்கணக்கில் வசூல் வேட்டை நடத்தியது தெரியவந்துள்ளது.

இதேபோல, அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக யாராவது கூறினால் பொதுமக்கள் யாரும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கோவை காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...