கோவையில் போதை மாத்திரை விற்பனை கும்பல் கைது - செல்போன், போதை மாத்திரைகள் பறிமுதல்!

கோவையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டுவந்த 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து நைட்ரவேட் - 25 மாத்திரைகள், டைடால் 25 மாத்திரைகள், மிட்டீலம் 100 மாத்திரைகள், ப்ரோஸ் 4 மாத்திரைகள், 3 செல்போன் ஆகியவையும் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், அவ்வப்போது தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் பஜார் காவல்நிலைய இன்பெக்டர் லதா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் உள்ளடக்கிய தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த பகுதியில் போதைக்காக மாத்திரைகளை விற்பது தெரியவந்தது. போலீசார் கண்காணித்ததில், சந்தேகத்திற்குரிய நான்கு பேர் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நான்கு பேரும் போதைக்காக மாத்திரையை விற்பனை செய்து வந்தது உறுதிசெய்யப்பட்டது.



இதையடுத்து, பிடிபட்ட முகமது தாரிக், நவாஸ், அல்மனார், கார்த்திகேயன் உள்ளிட்ட நான்கு போதை மாத்திரை வியாபாரிகளை பஜார் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், அவர்களிடமிருந்து நைட்ரவேட் - 25 மாத்திரைகள், டைடால் 25 மாத்திரைகள், மிட்டீலம் 100 மாத்திரைகள், ப்ரோஸ் 4 மாத்திரைகள், 3 செல்போன் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...