தாராபுரத்தில் இருசக்கர வாகனத்திருட்டு வழக்கு - சிசிடிவி காட்சி உதவியுடன் 3 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இரு சக்கர வாகனத்திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் தேடப்பட்டு வந்த 3 குற்றவாளிகளை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலைசாலையில் ஸ்டேட் பேங்க் அருகிலும் மற்றொரு பகுதியான பெரிய கடைவீதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிவிட்டதாக தாராபுரம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனத்தை பறிகொடுத்த நபர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

அந்தப் புகார்களை பதிவு செய்த காவல்துறையினர், தாராபுரம் நகர் முழுவதும் பொருத்தியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது மூன்று குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.

அதில், கோவை மாவட்டம் செல்வபுரம், சொக்கநாத புதூர் பகுதியைச் சேர்ந்த பழைய குற்றவாளி கார்த்தி என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அவர் தனது கூட்டாளிகளான நந்தகுமார், மகேஸ்வரன், வல்லரசு ஆகியோரை அடையாளம் காட்டினார்.

இதனைத் தொடர்ந்து, தொடர்புடைய 3 பேரையும் தாராபுரம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...