பல்லடத்தில் செய்தியாளர்கள் எனக் கூறி பார் உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் வீடியோ!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் செய்தியாளர்கள் என்ற பெயரில் உலாவரும் போலி நபர்கள், பார் உரிமையாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர். இவர் மங்கலத்தில் அரசு மதுபானக்கடைக்கு சொந்தமான பாரை ஏலத்திற்கு எடுத்து நடத்தி வருகிறார். கடந்த சில வாரங்களாக RNI மூலம் பதிவு பெற்ற பத்திரிகையில் இருந்து பேசுகிறோம் எனவும்.

நீங்கள் சட்டவிரோதமாக அரசு நிர்ணயித்த நேரத்தை தாண்டி மது பாட்டில்கள் விற்பனை செய்கிறீர்கள் எனவும் கூறிய நபர்கள், இதுகுறித்து நாங்கள் செய்தி வெளியிடாமல் இருக்க, எங்களுக்கு மாதாமாதம் 100 ரூபாய் மட்டும் கொடுத்தால்போதும் எனவும் கூறியுள்ளனர்.



பத்திரிகையாளர்கள் எனக் கூறி போனில் பேசிய நபர்களை நேரில் வரச்சொன்ன சுந்தர், அவர்களிடம் நீங்கள் எந்த பத்திரிகையில் செய்தியாளராக உள்ளீர்கள் எனவும் உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள் எனவும் கேட்டுள்ளார்.



நாங்கள் அரசின் RNI பதிவு பெற்ற ஆன்லைன் வலைதளம் மற்றும் மாத இதழ் பத்திரிக்கையில் செய்தியாளர்களாக பணியாற்றுகிறோம் எனவும், தங்களது அடையாள அட்டையை காட்டி விசிட்டிங் கார்டையும் சுந்தரிடம் கொடுத்துள்ளனர்.

அந்த இரண்டு நபர்களும் தலைக்கு நூறு ரூபாய் பணம் வாங்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



அவர்கள் அளித்த விசிட்டிங் கார்டில் இருந்த RNI எண்களை இணையதளத்தில் தேடிப் பார்த்தபோது இரண்டு பத்திரிகைகளின் RNI எண்களும் போலியானது என்பது தெரியவந்துள்ளது.

பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் பார்களில் 100 ரூபாய் வீதம் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தி வரும் மர்ம ஆசாமிகள் மீது காவல்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...