கோவை - சத்தியமங்கலம் சாலையில் சென்றவர்களுக்கு பாலியல் சீண்டல் விடுத்து பணம் கேட்டு தொந்தரவு செய்த திருநங்கைகள் கைது

சத்தியமங்கலம் சாலையில் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் அருகே சாலையில் சென்றவர்களிடம் பாலியல் சீண்டல் விடுத்து பணம் கேட்டு தொந்தரவு செய்த 2 திருநங்கைகளை கைது செய்து ஜாமீனில் விடுவித்த காவல்துறை, ரோந்து பணியை தீவிரப்படுத்த முடிவு.


கோவை: கோவை - சத்தியமங்கலம் சாலையில் சென்றவர்களிடம் பாலியல் ரீதியாக சீண்டி பணம் கேட்டு தொந்தரவு செய்த 2 திருநங்கைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாநகர் பகுதியில் இரவு நேரங்களில் அவ்வப்போது காவல்துறை உயர் அதிகாரிகள் ரோந்து செல்வது வழக்கம். அவ்வாறு ரோந்து செல்லும் பொழுது கோவை - சத்தியமங்கலம் சாலையில் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் அருகே திருநங்கைகள் சிலரை வழிமறித்து தொந்தரவு செய்துள்ளனர்.

இதனைப் இரவு ரோந்து பணியின்போது பார்த்த கோவை மாநகர துணை ஆணையாளர் சந்திஸ், நடத்திய விசாரணையில், நள்ளிரவில் திருநங்கைகள் சாலையில் வரும் நபர்களை வழிமறித்து அவர்களை பாலியல் ரீதியாக அணுக வற்புறுத்தியது தெரியவந்தது.

மேலும் நள்ளிரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் என பலரையும் வழிமறித்து உடலுறவு வைத்துக் கொள்ள அழைப்பதும், அவர்களிடமிருந்து பணம் பொருட்களை கேட்டு தொந்தரவு செய்வதும் தொடர்ந்து நடந்து வந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதன் காரணமாக சிட்டி போலீசார் அவ்வப்போது திருநங்கைகளை எச்சரித்து அனுப்பினாலும், போலீசாரின் எச்சரிக்கையினை அப்போதைக்கு ஏற்றுக் கொள்ளும் திருநங்கைகள், பின்னர் மீண்டும் இதே போன்று செயலில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

திருநங்கைகள் என்பதனால் பொதுமக்கள் போலீஸிடம் புகார் தரவும் தயங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் பொதுமக்களிடம் பாலியல் ரீதியாக உடலுறவுக்கு அழைத்து பணம் கேட்டு வற்புறுத்திய கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த திருநங்கை ருத்னால் (22), மற்றும் பொன்னியபுரம் பகுதியைச் சேர்ந்த ரோகினி (18) ஆகியோரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

போலீஸாரால் கைது செய்யப்பட்ட இருவரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இனி வரும் காலங்களில் இது போன்று நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்றும் போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் காந்திபுரம், 100 அடி ரோடு, ஆம்னி பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் திருநங்கைகள் இதுபோன்ற தொந்தரவு சம்பவங்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்துள்ளன.

அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் நாள்தோறும் இனி நள்ளிரவில் ரோந்து செல்ல திட்டமிட்டிருக்கின்றனர். திருநங்கைகளின் பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்கும் விதமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...