திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக பவன் குமார் ஜி.கிரியப்பனவர் பதவியேற்பு

திருப்பூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட பவன் குமார் ஜி.கிரியப்பனவர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்று கொண்ட நிலையில் அவருக்கு மேயர் தினேஷ்குமார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள பவன் குமார் ஜி.கிரியப்பனவர், மாநகராட்சி அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்று கொண்டார்.

தமிழகம் முழுவதும், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், திருப்பூர் மாநகராட்சி ஆணையராக இருந்த கிராந்தி குமார், கோவை ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு பதிலாக, கடலூர் மாவட்ட திட்ட இயக்குனராக இருந்த பவன் குமார் ஜி.கிரியப்பனவர் திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டார்.



இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக பவன் குமார் ஜி.கிரியப்பனவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.



அவருக்கு மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட பவன் குமார் ஜி.கிரியப்பனவர் ஏற்கனவே, தாராபுரம் துணை ஆட்சியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...