பிப்.18ல் கோவை திரும்பும் ஆதியோகி ரத யாத்திரை - ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க அழைப்பு!

தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் தரிசனத்திற்காக சென்றுள்ள ஆதியோகி ரத யாத்திரை, பிப்ரவரி 18ம் தேதி வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரிக்கு கோவை திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: உலகில்‌ தோன்றிய முதல்‌ யோகியான சிவன்‌ சப்தரிஷிகளுக்கு (அகத்தியர்‌ உள்ளிட்ட 7 ரிஷிகளுக்கு) யோக விஞ்ஞானம்‌ முழுவதையும்‌ பரிமாறினார்‌. சப்தரிஷிகள்‌ ஒவ்வொருவரும்‌, அந்த விஞ்ஞானத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன்‌ உலகின்‌ பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து சென்றனர்‌. இது ஆன்மீகத்தில்‌ மாபெரும்‌ அமைதி புரட்சி நிகழ அடித்தளமாக அமைந்தது.

யோகா கலாச்சாரம்‌ உலகம்‌ முழுவதும்‌ பரவுதற்கு முழுமுதற்காரணமாக இருக்கும்‌ ஆதியோகி சிவனுக்கு நன்றியை வெளிப்படுத்தும்‌ விதமாக கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில்‌ 112 அடியில்‌ ஆதியோகியின்‌ மார்பளவு திருவுருவம்‌ சத்குரு அவர்களால்‌ 2017-ம்‌ ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, ஆதியோகியை தரிசித்து அவரின்‌ அருளை பெறுவதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி உலகம்‌ முழுவதும்‌ இருந்து ஆயிரக்கணக்கான மக்கள்‌ தினமும்‌ வருகை தருகின்றனர்‌.

இந்நிலையில்‌, கோவையில்‌ செயல்படும்‌ தென்‌ கயிலாய பக்தி பேரவை சார்பில்‌ மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும்‌ ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, கோவைக்கு வந்து ஆதியோகியை தரிசிக்க இயலாமல்‌ இருக்கும்‌ மக்கள்‌ தங்கள்‌ ஊர்களிலேயே அவரை தரிசிப்பதற்கு இந்த யாத்திரை வாய்ப்பளித்துவருகிறது.

அதன்படி, 7 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவத்துடன்‌ கூடிய இந்த ரதங்கள்‌ தமிழகத்தின்‌ 4 திசைகளிலும்‌ பயணித்து கொண்டு இருக்கின்றன. கோவையில்‌ இருந்து கடந்த மாதம்‌ புறப்பட்ட 5 ஆதியோகி ரதங்கள்‌ 30-க்கும்‌ மேற்பட்ட மாவட்டங்களில்‌ சுமார்‌ 25 ஆயிரம்‌ கி.மீ பயணித்து மஹாசிவராத்திரியன்று மீண்டும்‌ கோவைக்கு திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பிப்ரவரி 18-ம்‌ தேதி கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலும்‌, அந்தந்த மாவட்டங்களிலும்‌ நடைபெறும்‌ ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க வருமாறு பொதுமக்களுக்கு இந்த யாத்திரையின்போது அழைப்பு விடுக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...