பிப்.18ல் கோவை திரும்பும் ஆதியோகி ரத யாத்திரை - ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க அழைப்பு!

தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் தரிசனத்திற்காக சென்றுள்ள ஆதியோகி ரத யாத்திரை, பிப்ரவரி 18ம் தேதி வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரிக்கு கோவை திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: உலகில்‌ தோன்றிய முதல்‌ யோகியான சிவன்‌ சப்தரிஷிகளுக்கு (அகத்தியர்‌ உள்ளிட்ட 7 ரிஷிகளுக்கு) யோக விஞ்ஞானம்‌ முழுவதையும்‌ பரிமாறினார்‌. சப்தரிஷிகள்‌ ஒவ்வொருவரும்‌, அந்த விஞ்ஞானத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன்‌ உலகின்‌ பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து சென்றனர்‌. இது ஆன்மீகத்தில்‌ மாபெரும்‌ அமைதி புரட்சி நிகழ அடித்தளமாக அமைந்தது.

யோகா கலாச்சாரம்‌ உலகம்‌ முழுவதும்‌ பரவுதற்கு முழுமுதற்காரணமாக இருக்கும்‌ ஆதியோகி சிவனுக்கு நன்றியை வெளிப்படுத்தும்‌ விதமாக கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில்‌ 112 அடியில்‌ ஆதியோகியின்‌ மார்பளவு திருவுருவம்‌ சத்குரு அவர்களால்‌ 2017-ம்‌ ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, ஆதியோகியை தரிசித்து அவரின்‌ அருளை பெறுவதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி உலகம்‌ முழுவதும்‌ இருந்து ஆயிரக்கணக்கான மக்கள்‌ தினமும்‌ வருகை தருகின்றனர்‌.

இந்நிலையில்‌, கோவையில்‌ செயல்படும்‌ தென்‌ கயிலாய பக்தி பேரவை சார்பில்‌ மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும்‌ ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, கோவைக்கு வந்து ஆதியோகியை தரிசிக்க இயலாமல்‌ இருக்கும்‌ மக்கள்‌ தங்கள்‌ ஊர்களிலேயே அவரை தரிசிப்பதற்கு இந்த யாத்திரை வாய்ப்பளித்துவருகிறது.

அதன்படி, 7 அடி உயரமுள்ள ஆதியோகி திருவுருவத்துடன்‌ கூடிய இந்த ரதங்கள்‌ தமிழகத்தின்‌ 4 திசைகளிலும்‌ பயணித்து கொண்டு இருக்கின்றன. கோவையில்‌ இருந்து கடந்த மாதம்‌ புறப்பட்ட 5 ஆதியோகி ரதங்கள்‌ 30-க்கும்‌ மேற்பட்ட மாவட்டங்களில்‌ சுமார்‌ 25 ஆயிரம்‌ கி.மீ பயணித்து மஹாசிவராத்திரியன்று மீண்டும்‌ கோவைக்கு திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பிப்ரவரி 18-ம்‌ தேதி கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலும்‌, அந்தந்த மாவட்டங்களிலும்‌ நடைபெறும்‌ ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க வருமாறு பொதுமக்களுக்கு இந்த யாத்திரையின்போது அழைப்பு விடுக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...