உடுமலையில் உலக ஈர நில நாள் விழா கொண்டாட்டம்

உடுமலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வன கோட்டம் அலுவலகத்தில் இன்று உலக ஈர நில நாள் விழாவில், நீராதாரம் உள்ள பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வன கோட்டம் அலுவலகத்தில் இன்று உலக ஈர நில நாள் விழா கொண்டாடப்பட்டது.



விழாவில், உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலர் சிவகுமார் வரவேற்றார். துணை இயக்குநர் தேஜஸ்வி விழாவிற்கு தலைமை தாங்கினார்.



அதனைத் தொடர்ந்து திருப்பூர் வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் கணேஷ் ராம் அவர்கள் ஈர நிலங்கள் பாதுகாப்பு குறித்து மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.



நமது ஊரில் உள்ள ஏரி, குளம், குட்டை போன்ற நீராதாரம் உள்ள பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக நிகிலேஷ் மற்றும் டாக்டர். அருண் வெங்கடேசன் கலந்துகொண்டு, ஈர நிலங்கள் குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் பேசினர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...