பொள்ளாச்சி மயானப் பாதை பிரச்சினை - இறந்தவர் உடலை அடக்கம் செய்ய ஆற்றில் இறங்கி தூக்கிச் செல்லும் அவலம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மயானத்திற்குச் செல்ல முறையான பாதை இல்லாததால், இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய ஆற்றுத் தண்ணீரில் இறங்கி தூக்கிச் சென்ற அவலம் அரங்கேறியது.



கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள கோவிந்தனூர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், இந்தக் கிராமத்தில் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் உடல் நலக்குறைவால் இறந்தார்.

இங்கு இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மயானத்திற்கு செல்ல பாதை இல்லாமல் சேறும் சகதியுமாக உள்ள நீரில் இறங்கி ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில், இறந்துபோன ராமசாமியின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் சேறும், சகதியும் உள்ள முட்புதர்களால் சூழ்ந்துள்ள ஆற்றைக் கடந்து சடலத்தை தூக்கி சென்று அடக்கம் செய்தனர்.

ஒவ்வொரு முறையும் இறந்தவர்களின் உடலை இப்படித்தான் எடுத்துச் சென்று மயானத்தில் அடக்கம் செய்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் மழை காலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், இறந்தவர்களின் உடலை ஆற்றில் இறங்கி தூக்கி சென்றுதான் அடக்கம் செய்ய வேண்டிய நிலை இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

இது குறித்து பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம், கோவிந்தனூர் கிராம மக்கள் மயானம் செல்லும் பாதையில் ஆற்றை கடக்க தரைப்பாலம் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

இதனிடையே, இறந்தவரின் உடலை நீரில் ஆற்றைக் கடந்து உறவினர்கள் சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...