ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு பார்வர்டு பிளாக் ஆதரவு! - தேசிய துணைத்தலைவர் கதிரவன் தகவல்

தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரையும் பிரித்து வைத்துவிட்டு நாங்கள் சேர்த்து வைப்பதாக நாடகமாடி வருகிறார் என பார்வர்டு பிளாக் தேசிய துணைத்தலைவர் கதிரவன் குற்றச்சாட்டு.



திருப்பூர்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி பிரச்சாரம் செய்யும் என அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மன்னரைப் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் 8ஆவது திருப்பூர் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவர் கதிரவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.



பின்னர் செய்தியாளர்களிடம் கதிரவன் கூறியுள்ளதாவது:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி வருகின்ற 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். நிச்சயம் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரையும் பிரித்து வைத்துவிட்டு நாங்கள் சேர்த்து வைப்பதாக நாடகமாடி வருகிறார். தமிழக பாஜகவால் தமிழகத்தில் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது.

வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைத்தால் நிச்சயம் வெற்றி பெறும். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இம்முயற்சியை மேற்கொள்ளும்.

இவ்வாறு, கதிரவன் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...