தென்னை விவசாயத்தை பாதுகாக்க விவசாய சங்கத்தினர் கோரிக்கை!

தென்னை விவசாயத்தைப் பாதுகாக்கும் விதமாக, பிஏபி பிரதான கால்வாயின் இருபுற விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் மின் இணைப்புகளைத் துண்டிக்க நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைக்கத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை.



கோவை: தென்னை விவசாயத்தைக் காக்க அதிகாரிகளுக்கு விவசாய சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட குழு சார்பாகக் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:



கடந்த 60 ஆண்டு காலமாக பிஏபி நீரை நம்பி பிரதான கால்வாயின் இருபுறமும் உள்ள விவசாயிகள் ஆயக்கட்டுக்கு உட்படாத விவசாய நிலங்களுக்குக் கிணற்று நீர் மூலமாக விவசாயம் செய்து வந்தனர்.

இந்நிலையில் சில விவசாய அமைப்புகள் மற்றும் நீரினை பயன்படுத்துவோர் சங்கப் பிரதிநிதிகள் கொடுத்த புகாரின் பேரில், பிஏபி பிரதான கால்வாயின் இருபுற விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் மின் இணைப்புகளைத் துண்டிக்க நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்.



இதனால் நீண்ட கால நிலை பயிர்களான தென்னை மரங்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பிரதான கால்வாயில் கரையோர விவசாயிகளும் விவசாயிகளே என்பதைக் கருத்தில் கொண்டு பிஏபி பாசனத் திட்டத்தைப் பலப்படுத்த நீர் ஆதாரத்தைப் பெருக்க பல்வேறு வழியில் உள்ளதைக் கண்டறிந்து அதைச் செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.

நொய்யல் ஆற்றைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். முதலமைச்சர் மூலம் விவசாயிகளின் பிரச்சனை குறித்துப் பேச நேரம் ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு விவசாயச் சங்க நிர்வாகிகள் கார்த்தி, கிருஷ்ணசாமி, ராமசாமி, ஆனந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...