கோவை மாநகராட்சி கூட்டத்தில் குடும்பத்துடன் இளைஞர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

கோவை மாநகராட்சி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மாநகராட்சி அலுவலகத்திற்கு திடீரென டீசல் கேனுடன் வந்த இளைஞர், தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.



கோவை: கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள விக்டோரியா ஹாலில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.



அப்போது மதியம் சுமார் ஒரு மணியளவில் கூட்டம் நடைபெற்ற விக்டோரியா ஹால் முன்பு வந்த இளைஞர் ஒருவர் தனது கை குழந்தை மற்றும் மனைவியுடன் டீசல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார்.



இந்நிலையில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர், துரிதமாகச் செயல்பட்டு இளைஞரின் கையிலிருந்த கேனை பிடுங்கினர்.

அவரிடம் விசாரித்த போது, கோவை குனியம்புத்தூரை சேர்ந்த நவீன் என்றும், சுமார் 5 ஆண்டுகளாக மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்ததாகவும், தனக்குக் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையைக் கொடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும் இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்ட போது சரிவரப் பதில் கூறவில்லை எனவும் அலட்சியமாக நடத்துவதாகவும், பணத்தைக் கொடுக்க முடியாது என மிரட்டுவதாகவும், துணை மேயர் உடன் உள்ள டேவிட் என்பவரும், உதவிப் பொறியாளர் ஒருவர் மீதும் கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இதனிடையே தற்கொலைக்கு முயன்றவரை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இளைஞர் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்றதால் மாநகராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞரின் குற்றச்சாட்டுத் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...