கோவை மாநகராட்சி கூட்டத்தில் குடும்பத்துடன் இளைஞர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

கோவை மாநகராட்சி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மாநகராட்சி அலுவலகத்திற்கு திடீரென டீசல் கேனுடன் வந்த இளைஞர், தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.



கோவை: கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள விக்டோரியா ஹாலில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.



அப்போது மதியம் சுமார் ஒரு மணியளவில் கூட்டம் நடைபெற்ற விக்டோரியா ஹால் முன்பு வந்த இளைஞர் ஒருவர் தனது கை குழந்தை மற்றும் மனைவியுடன் டீசல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார்.



இந்நிலையில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறையினர், துரிதமாகச் செயல்பட்டு இளைஞரின் கையிலிருந்த கேனை பிடுங்கினர்.

அவரிடம் விசாரித்த போது, கோவை குனியம்புத்தூரை சேர்ந்த நவீன் என்றும், சுமார் 5 ஆண்டுகளாக மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்ததாகவும், தனக்குக் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையைக் கொடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

மேலும் இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்ட போது சரிவரப் பதில் கூறவில்லை எனவும் அலட்சியமாக நடத்துவதாகவும், பணத்தைக் கொடுக்க முடியாது என மிரட்டுவதாகவும், துணை மேயர் உடன் உள்ள டேவிட் என்பவரும், உதவிப் பொறியாளர் ஒருவர் மீதும் கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இதனிடையே தற்கொலைக்கு முயன்றவரை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இளைஞர் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்றதால் மாநகராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞரின் குற்றச்சாட்டுத் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...