கோவை கணபதியில் போக்குவரத்து மாற்றம் - மாநகர போலீசார் அறிவிப்பு!

கோவை கணபதி பகுதியில் போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பை கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது.



கோவை: கோவை கணபதி பகுதியில் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மோர் மார்க்கெட் சாலையில் இருந்து சங்கனூர் சாலைக்கு தமிழ்நாடு பேருந்து நிறுத்தம் (கண்ணன் பல்பொருள் அங்காடி) வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் இடதுபுறமாகத் திரும்பி, டெக்ஸ்டூல் பாலத்தின் பயன்பாட்டுச் சாலையில் நுழைந்து‘யு’டர்ன் எடுத்து பயணத்தைத் தொடர வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோல், மோர் மார்க்கெட் சாலையில் இருந்து தமிழ்நாடு பேருந்து நிலையம் வழியாக காந்திபுரம் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து சிக்னலுக்காக காத்திருக்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்னல் பகுதியில் ஏற்படும் வாகனப் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், வாகன ஓட்டிகளின் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் நோக்கத்திலுமே இந்த போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...