வால்பாறையில் சுற்றுலாப் பயணிகளை விரட்டிய காட்டு யானைகள் - ஆபத்தை உணராமல் போட்டோ எடுத்ததால் விபரீதம்!

கோவை மாவட்டம் வால்பாறையில் கோயில் அருகே வந்து நின்ற காட்டு யானைக் கூட்டத்தை சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்தனர். ஆபத்தை உணராமல் செய்த செயலால் காட்டு யானைகள் சுற்றுலாப் பயணிகளை விரட்டியதால் அங்கு பதற்றம் நிலவியது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானை சிறுத்தை காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் மனிதர்களை அச்சுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் வால்பாறை அருகே புதுதோட்டம் பொள்ளாச்சி சாலையில் காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டு வந்தனர்.

இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 25 காட்டு யானைகள் தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் யானைகளை பார்த்து புகைப்படம் எடுத்து சத்தமிட்டுக்கொண்டிருந்தன.

மனித வனவிலங்கு மோதல் தடுப்பு குழுவினர் யானை அருகில் சுற்றுலா பயணிகளை செல்ல விடாமல் தடுத்து நின்று பாதுகாப்பு பணியில் இருந்தனர். இருப்பினும், காட்டு யானைகளின் கூட்டத்திலிருந்து நான்கு யானைகள் பிரிந்து மக்கள் நிற்கும் கோவில் பகுதிக்கு வேகமாக வந்தது.



வனத்துறையினர் யானைகளை விரட்டியும் யானை செல்லாமல் கோயில் அருகே வந்து நின்று நேற்று மதியம் அன்னதானமிட்ட சாப்பாடு கழிவுகளை தேயிலை தோட்டத்தில் கொட்டி இருந்தனர். அதை சாப்பிட்டும் அங்கு வாழை மரம் போன்றவை இருந்ததால் அதை சாப்பிட்டும் காட்டு யானை சிறிது நேரம் நின்றது. வனத்துறையினர் யானைகளை விரட்டியும் செல்லாமல் நின்று கொண்டிருந்தது. இதைப்பார்த்த சுற்றுலா பயணிகளும் கோவிலுக்கு வந்த பக்தர்களும் புகைப்படம் எடுத்து ஆரவாரம் செய்தனர்.



சிறிது நேரத்தில் தேயிலை தோட்டத்தில் இருந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் முயற்சித்தனர். அப்போது, யானை செல்லும் பாதையிலேயே சுற்றுலா பயணிகள் சென்று புகைப்படம் எடுத்தனர்.



இதனால், கூட்டத்தில் இருந்த ஒரு காட்டு யானை அவர்களை துரத்தி சாலைவரை விரட்டி வந்தது. இதில், அவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். சிறிது நேரம் அப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானை பின்னர் வனப்பகுதிக்கு திரும்பச் சென்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



ஆபத்தை உணராமல் யானை அருகில் சென்று புகைப்படம் எடுத்து வரும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் கண்டிக்க வேண்டும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், வனத்துறையினர் மனித விலங்கு மோதலை தடுப்பதற்கு, பணியில் இருக்கும்பொழுது அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கவும், யூனிபார்ம் மற்றும் விசில், அடையாள அட்டை போன்றவை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...