கோவையின் ஒரு நாள் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் போட்டி - அசத்திய மாணவிகள்..!

கோவையில் 'ஒரு நாள் ஆட்சியர், காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர்' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் விருதுகள் வழங்கி பாராட்டினர்.


கோவை: கோவையில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமி, யங் இந்தியன்ஸ் என்ற அமைப்புடன் இணைந்து, கல்லூரி மாணவர்களுக்கான 'ஒரு நாள் – மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர்' என்ற தனித்துவமான போட்டியை கோவையில் நடத்தியது.

இந்தப் போட்டியில் பதிவு செய்து பங்கேற்கும் மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை, மின் ஆளுமை, போதைப்பொருள் பயன்பாடு, பெண்கள் பாதுகாப்பு, விபத்தில்லா சாலைகள், சைபர் பாதுகாப்பு மற்றும் தண்ணீர் தொடர்பான மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் மாநகராட்சியால் கண்டறியப்பட்ட சிக்கல் அறிக்கைகள் வழங்கப்பட்டது.

இதில், வழங்கப்பட்டுள்ள சிக்கல் அறிக்கைகளுக்கு புதுமையான தீர்வுகளை மாணவர்கள் வழங்க வேண்டும் என்பதே இப்போட்டி. இதில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையருடன் ஒரு நாளை செலவிடுவார்கள்.

மேலும், வெற்றி பெறுபவர்கள் அனைவருக்கும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் 100% உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டியில் 250 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன் இறுதிச்சுற்று கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகர காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் தலைவர் அருண், தலைமை நிர்வாக அதிகாரி யாஸ்மின், யங் இந்தியன்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் வைஷ்ணவி, செந்தில்நாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



இந்த புதுமையான போட்டியில், ஒரு நாள் மாநகராட்சி ஆணையராக செயிண்ட் ஜோசப் பள்ளி மாணவி அர்ஷிதா, ஒரு நாள் காவல்துறை ஆணையராக பி.ராஜேஸ்வரி, ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக அனுவர்ஷினி ஆகியோர் வெற்றி பெற்றனர்.







இவர்கள் 3 பேருக்கும் விருதுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு, 100% உதவித்தொகையுடன் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிலும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.



இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசியதாவது, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இந்தப் போட்டி ஒரு சமூக ஆராய்ச்சி.

கோவை நகரில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளை மாணவர்களிடத்தில் கொடுத்து அந்தப் பிரச்சனையின் மீது அவர்களின் பார்வையும், தீர்வும் எப்படி உள்ளது என்பதைக் கண்டறியும் படி இந்த போட்டியை வடிவமைத்தோம்.



இதில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டது வரவேற்கத்தக்கது. பிரச்சனைகளை கடந்து போகும் அதற்கு சரியான தீர்வு கண்டறிய வேண்டியது எதிர்கால இளைஞர்களின் கடமை.

இவ்வாறு அவர் பேசினார்.



இதனைத் தொடர்ந்து, மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் பேசியதாவது, ஸ்மார்ட் சிட்டி, பெண்கள் பாதுகாப்பு, அரசு பள்ளிக் குழந்தைகள் திறன் வளர்த்தல் என பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் தீர்வுகளும், திட்டங்களும் இந்தப் போட்டியில் கொடுத்துள்ளனர்.

அது ஒருங்கிணைக்கப்பட்டு, ஆலோசிக்கப்பட்டு தேவைப்படும் இடங்களில் செயல்படுத்தப்படும். அரசுப்பணிக்கு பயிலும் மாணவர்கள் மக்கள் நலனுக்கு எந்தத் திட்ட மானாலும் குறுகிய காலமல்லாமல் நீண்ட கால நோக்கில் அவர்களுக்கு பயன்படும் திட்டங்கள் வகுக்க வேண்டும். அதன்படியே அரசும், நிர்வாகமும் திட்டமிட்டு செயல்படுத்துகிறது.



மேற்கத்திய நாடுகளில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் பல சமூகப் பணிகளில் ஈடுபடுகின்றனர். அதற்கு நன்மதிப்பு சான்றிதழ் அரசு வழங்குகிறது. அந்தச் சான்றிதழ் அவர்களின் மேற்படிப்பு, வேலை வாய்ப்புக்கான மதிப்பைக் கூட்டுகிறது.



அதுபோல் நம் நாட்டிலும் மாணவர்கள் பல சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும். நன்மதிப்பு ரேட்டிங் முறையும் இங்கு கொண்டு வந்தால் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...