தமிழர்களை வடமாநிலத்தவர்கள் தாக்கியதாக பரவும் செய்தி பொய்யானது..! - திருப்பூர் போலீசார் விளக்கம்!

திருப்பூர் அடுத்த வேலம்பாளையத்தில் தமிழர்களை வடமாநிலத்தவர்கள் தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் விளக்கமளித்து அறிக்கை.


திருப்பூர்: திருப்பூரில் சமீபத்தில் வடமாநில இளைஞர்கள் சிலர் தமிழர்களை தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தி உண்மைக்கு மாறானது என திருப்பூர் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், திருப்பூர்‌ வடக்கு மாவட்டம்‌, வேலம்பாளையம்‌ காவல்‌ நிலைய சரக எல்லைக்குட்பட்ட திலகர்‌ நகரில்‌ ரியா பேஷன்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் நபர் ஒருவர் ‌கடந்த 14.01.2023 அன்று மாலை நேர தேநீர்‌ இடைவேளையின்‌ போது அருகில்‌ உள்ள டீ கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது அந்த டீ கடையில், இருவர் அமர்ந்திருந்துள்ளனர்.

இந்நிலையில், சிகரெட் புகை பட்டதில் அந்த மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ரியா பேஷன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர், தனது, நண்பர்களை அழைத்து வந்ததால் இரு தரப்பினர்களுக்கும்‌ இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இறுதியாக அனைவரும் கலைந்து சென்ற நிலையில், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக யாரும்‌ காவல் நிலையத்தில்‌ புகார்‌ அளிக்கவில்லை.

இந்த பிரச்சினையானது, தொழில்‌ போட்டியோ, வேலைவாய்ப்பு சம்பந்தமாகவோ அல்லது எந்தவித முன்விரோதம்‌ காரணமாகவோ ஏற்படவில்லை என்றும்‌ தற்செயலாக இரண்டு நபர்‌ மற்றும்‌ அவர்களது நண்பர்களுக்குள்‌ ஏற்பட்ட பிரச்சனையே என்று தெரியவருகிறது.

இருப்பினும்‌ இது சம்பந்தமாக முழுமையாக விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள்‌ மீது நடவடிக்கை எடுக்கப்படும்‌. 14.01.2023 அன்று நடந்து முடிந்த மேற்கண்ட நிகழ்வை 26.01.2023 அன்று நடைபெற்றதாகவும்‌, பனியன்‌ கம்பெனியில்‌ வேலை செய்யும்‌ தமிழர்களை வடஇந்தியர்கள்‌ விரட்டுவதாக சமூக வலைதளங்களில்‌ தவறாக பகிரப்பட்டு வருகிறது.

இவ்வாறு திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...