தமிழர்களை வடமாநிலத்தவர்கள் தாக்கியதாக பரவும் செய்தி பொய்யானது..! - திருப்பூர் போலீசார் விளக்கம்!

திருப்பூர் அடுத்த வேலம்பாளையத்தில் தமிழர்களை வடமாநிலத்தவர்கள் தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் விளக்கமளித்து அறிக்கை.


திருப்பூர்: திருப்பூரில் சமீபத்தில் வடமாநில இளைஞர்கள் சிலர் தமிழர்களை தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தி உண்மைக்கு மாறானது என திருப்பூர் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், திருப்பூர்‌ வடக்கு மாவட்டம்‌, வேலம்பாளையம்‌ காவல்‌ நிலைய சரக எல்லைக்குட்பட்ட திலகர்‌ நகரில்‌ ரியா பேஷன்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் நபர் ஒருவர் ‌கடந்த 14.01.2023 அன்று மாலை நேர தேநீர்‌ இடைவேளையின்‌ போது அருகில்‌ உள்ள டீ கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது அந்த டீ கடையில், இருவர் அமர்ந்திருந்துள்ளனர்.

இந்நிலையில், சிகரெட் புகை பட்டதில் அந்த மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ரியா பேஷன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர், தனது, நண்பர்களை அழைத்து வந்ததால் இரு தரப்பினர்களுக்கும்‌ இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இறுதியாக அனைவரும் கலைந்து சென்ற நிலையில், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக யாரும்‌ காவல் நிலையத்தில்‌ புகார்‌ அளிக்கவில்லை.

இந்த பிரச்சினையானது, தொழில்‌ போட்டியோ, வேலைவாய்ப்பு சம்பந்தமாகவோ அல்லது எந்தவித முன்விரோதம்‌ காரணமாகவோ ஏற்படவில்லை என்றும்‌ தற்செயலாக இரண்டு நபர்‌ மற்றும்‌ அவர்களது நண்பர்களுக்குள்‌ ஏற்பட்ட பிரச்சனையே என்று தெரியவருகிறது.

இருப்பினும்‌ இது சம்பந்தமாக முழுமையாக விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள்‌ மீது நடவடிக்கை எடுக்கப்படும்‌. 14.01.2023 அன்று நடந்து முடிந்த மேற்கண்ட நிகழ்வை 26.01.2023 அன்று நடைபெற்றதாகவும்‌, பனியன்‌ கம்பெனியில்‌ வேலை செய்யும்‌ தமிழர்களை வடஇந்தியர்கள்‌ விரட்டுவதாக சமூக வலைதளங்களில்‌ தவறாக பகிரப்பட்டு வருகிறது.

இவ்வாறு திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...