கோவையில் தலைக்கவசம் அணியாமல் பயணம் - 937 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

கோவை மாநகர காவல்துறை சார்பில் மாநகர் முழுவதும் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்கள் சோதனையிடப்பட்டதில், தலைக்கவசம் அணியாமல் வந்த 937 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 937 பேர் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாநகரில் 100 சதவீத கட்டாயத் தலைக்கவசம் அணிவதை உறுதிப்படுத்தும் வகையில், ஜன.27ம் தேதி மாநகரின் 15 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து இருசக்கர வாகனங்கள் சோதனையிடப்படும் என கடந்த 24ம் தேதி மாநகர காவல்துறை அறிவித்தது.

அதன்படி, நேற்று காலை முதல் மாலை வரை கோவை மாநகர காவல்துறை சார்பில் 15 இடங்களில் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்கள் சோதனையிடப்பட்டன.



அவற்றில், 1,282 வாகனங்களில் தலைக்கவசம் இன்றி வந்தவர்களில் 937 பேர் மீது போக்குவரத்து சட்டவிதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 345 பேர் காவல்துறையினரால் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

மேலும், தலைக்கவசம் அணிந்து வந்த 2543 பேர் மற்றும் தலைக்கவசம் அணியாமல் வந்த 1282 பேர் என மொத்தம் 3875 பேருக்கு போக்குவரத்து சட்டவிதிகள் பற்றியும், இருசக்கர வாகனங்களில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வது குறித்தும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டதாக கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...