கோவையில் தலைக்கவசம் அணியாமல் பயணம் - 937 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

கோவை மாநகர காவல்துறை சார்பில் மாநகர் முழுவதும் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்கள் சோதனையிடப்பட்டதில், தலைக்கவசம் அணியாமல் வந்த 937 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 937 பேர் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாநகரில் 100 சதவீத கட்டாயத் தலைக்கவசம் அணிவதை உறுதிப்படுத்தும் வகையில், ஜன.27ம் தேதி மாநகரின் 15 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து இருசக்கர வாகனங்கள் சோதனையிடப்படும் என கடந்த 24ம் தேதி மாநகர காவல்துறை அறிவித்தது.

அதன்படி, நேற்று காலை முதல் மாலை வரை கோவை மாநகர காவல்துறை சார்பில் 15 இடங்களில் சிறப்பு சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்கள் சோதனையிடப்பட்டன.



அவற்றில், 1,282 வாகனங்களில் தலைக்கவசம் இன்றி வந்தவர்களில் 937 பேர் மீது போக்குவரத்து சட்டவிதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 345 பேர் காவல்துறையினரால் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

மேலும், தலைக்கவசம் அணிந்து வந்த 2543 பேர் மற்றும் தலைக்கவசம் அணியாமல் வந்த 1282 பேர் என மொத்தம் 3875 பேருக்கு போக்குவரத்து சட்டவிதிகள் பற்றியும், இருசக்கர வாகனங்களில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வது குறித்தும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டதாக கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...