உதகை அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோவில் திருவிழா - பாரம்பரிய நடனமாடிய தோடர்கள்!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பொள்சி எனும் அழைக்கப்படும் கோவில் திருவிழாவில் தோடர் இன ஆண்கள் மட்டுமே பங்கேற்பு. இந்த திருவிழாவில் பெண்கள் பங்கேற்க அனுமதி இல்லை.



நீலகிரி: உதகை அருகே 70 கிராம தோடர் இன ஆண்கள் பங்கேற்ற திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் தோடர் இன ஆதிவாசி மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். மந்து என்று அழைக்கப்படும் 70 கிராமங்களில் சுமார் 2000 தோடர் இன மக்கள் உள்ளனர். இந்த மக்களின் பாரம்பரியமும், கலாச்சாரமும் வினோதமானதாகவே உள்ளது.

இந்த நிலையில் உதகை அருகே உள்ள தாரநாடு மந்து தோடர் இன மக்களின் கோவில் ஒன்று சோலூர் அருகே அமைந்துள்ளது.



இக்கோவில் 10 ஆண்டுகளுக்குப் பின் புதுப்பிக்கப்பட்டது. அதற்காக 30 நாட்கள் விரதம் இருந்த தோடர் இன ஆண்கள் அப்பர்பவானி பகுதிக்குச் சென்று அவுல் என்ற புற்களையும், பெரம்பு, மூங்கில் போன்றவற்றையும் எடுத்து வந்து கோவிலை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

புதுபிக்கப்பட்ட இந்த கோவிலில் இன்று பொள்சி என்று அழைக்கப்படும் திருவிழா நடைபெற்றது. தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய முறைபடி கோவிலின் முன்பு ஒன்று கூடிய மண்டியிட்டு வணங்கினர்.



இதனையடுத்து கோவிலின் வாயிலின் முன்புறத்தில் பாரம்பரிய நடனத்தை மூத்த தோடர் இன ஆண்கள் ஆடினர்.



இதனையடுத்து அருகில் உள்ள புல்வெளியில் ஒன்று திரண்ட தோடர் இன ஆண்கள் ஒருவருக்கு ஒருவர் கைகளைக் கோர்த்து வட்டமாக நின்று தங்களுடைய பாரம்பரிய நடனத்தை ஆடினர்.



பெண்களுக்கு இந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...