உதகை அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற கோவில் திருவிழா - பாரம்பரிய நடனமாடிய தோடர்கள்!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பொள்சி எனும் அழைக்கப்படும் கோவில் திருவிழாவில் தோடர் இன ஆண்கள் மட்டுமே பங்கேற்பு. இந்த திருவிழாவில் பெண்கள் பங்கேற்க அனுமதி இல்லை.



நீலகிரி: உதகை அருகே 70 கிராம தோடர் இன ஆண்கள் பங்கேற்ற திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் தோடர் இன ஆதிவாசி மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். மந்து என்று அழைக்கப்படும் 70 கிராமங்களில் சுமார் 2000 தோடர் இன மக்கள் உள்ளனர். இந்த மக்களின் பாரம்பரியமும், கலாச்சாரமும் வினோதமானதாகவே உள்ளது.

இந்த நிலையில் உதகை அருகே உள்ள தாரநாடு மந்து தோடர் இன மக்களின் கோவில் ஒன்று சோலூர் அருகே அமைந்துள்ளது.



இக்கோவில் 10 ஆண்டுகளுக்குப் பின் புதுப்பிக்கப்பட்டது. அதற்காக 30 நாட்கள் விரதம் இருந்த தோடர் இன ஆண்கள் அப்பர்பவானி பகுதிக்குச் சென்று அவுல் என்ற புற்களையும், பெரம்பு, மூங்கில் போன்றவற்றையும் எடுத்து வந்து கோவிலை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

புதுபிக்கப்பட்ட இந்த கோவிலில் இன்று பொள்சி என்று அழைக்கப்படும் திருவிழா நடைபெற்றது. தோடர் இன மக்கள் தங்களது பாரம்பரிய முறைபடி கோவிலின் முன்பு ஒன்று கூடிய மண்டியிட்டு வணங்கினர்.



இதனையடுத்து கோவிலின் வாயிலின் முன்புறத்தில் பாரம்பரிய நடனத்தை மூத்த தோடர் இன ஆண்கள் ஆடினர்.



இதனையடுத்து அருகில் உள்ள புல்வெளியில் ஒன்று திரண்ட தோடர் இன ஆண்கள் ஒருவருக்கு ஒருவர் கைகளைக் கோர்த்து வட்டமாக நின்று தங்களுடைய பாரம்பரிய நடனத்தை ஆடினர்.



பெண்களுக்கு இந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...