கோவையில் போலி ஆவணம் மூலம் வங்கிக் கடன் பெற்ற வழக்கு - முன்னாள் வங்கி மேலாளர் உட்பட 3 பேருக்கு சிறை!

கோவையில் கனரா வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் வங்கி மேலாளர் உட்பட 3 பேருக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து கோவை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு.


கோவை: கோவையில் போலி ஆவணம் மூலம் வங்கி கடன் பெற்ற வழக்கில் முன்னாள் வங்கி மேலாளர் உட்பட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து கோவை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை சாமாளாபுரத்தைச் சேர்ந்தவர்கள் கந்தசாமி மற்றும் மாரப்பன். ஜவுளி தொழில் நடத்திவரும் இவர்கள், விசைத்தறி வாங்குவதாக கூறி போலி ஆவணம் சமர்பித்து ரூ.9.97 லட்சம் கனரா வங்கியில் கடன் பெற்றனர். அந்தத் தொகையை மாற்று தேவைக்காக பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடி தொடர்பாக, கடந்த 2019ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, கந்தசாமி, மாரப்பன் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.40,000 அபராதமும், ஆவணங்களை முறையாக ஆராயாமல் கடன் வழங்கியதால் கனரா வங்கிக்கு ரூ.10.20 லட்சம் இழப்பு ஏற்பட காரணமாக இருந்த வங்கியின் மேலாளர் ராமச்சந்திரன் என்பவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும்,ரூ.80,000 அபராதம் விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...