கோவையில் போலி ஆவணம் மூலம் வங்கிக் கடன் பெற்ற வழக்கு - முன்னாள் வங்கி மேலாளர் உட்பட 3 பேருக்கு சிறை!

கோவையில் கனரா வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் வங்கி மேலாளர் உட்பட 3 பேருக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து கோவை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு.


கோவை: கோவையில் போலி ஆவணம் மூலம் வங்கி கடன் பெற்ற வழக்கில் முன்னாள் வங்கி மேலாளர் உட்பட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து கோவை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை சாமாளாபுரத்தைச் சேர்ந்தவர்கள் கந்தசாமி மற்றும் மாரப்பன். ஜவுளி தொழில் நடத்திவரும் இவர்கள், விசைத்தறி வாங்குவதாக கூறி போலி ஆவணம் சமர்பித்து ரூ.9.97 லட்சம் கனரா வங்கியில் கடன் பெற்றனர். அந்தத் தொகையை மாற்று தேவைக்காக பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடி தொடர்பாக, கடந்த 2019ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, கந்தசாமி, மாரப்பன் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.40,000 அபராதமும், ஆவணங்களை முறையாக ஆராயாமல் கடன் வழங்கியதால் கனரா வங்கிக்கு ரூ.10.20 லட்சம் இழப்பு ஏற்பட காரணமாக இருந்த வங்கியின் மேலாளர் ராமச்சந்திரன் என்பவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும்,ரூ.80,000 அபராதம் விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...