கோவையில் செல்போனை பறித்துச் சென்ற திருடர்கள் - விரட்டிப் பிடித்த இளைஞர்.!

கோவை சாஸ்திரி சாலையில் சென்றுகொண்டிருந்த இளைஞரிடம், இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் செல்போனை பறித்து தப்பமுயன்றபோது, பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.



கோவை: கோவை ப்ரூக்ஃபீல்டில் வேலை செய்து வருபவர் விக்னேஸ்வரன் . இவர் வேலைக்கு செல்வதற்காக ராம் நகர் வழியே சாஸ்திரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், விக்னேஸ்வரனின் செல்போனை பறித்து தப்பி ஓட முயன்றுள்ளனர்.

அப்போது, அவர்களை துரத்தி பிடிக்க விக்னேஸ்வரன் முயன்றார். அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் இருசக்கர வாகனத்தை மடக்கிய விக்னேஸ்வரன், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து காட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

பிடிபட்ட நபர்களிடம் கார்ட்டூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், வழிப்பறியில் ஈடுபட்ட முதல் குற்றவாளி வசந்தகுமார் வர்ஷாவில் பணியாற்றக்கூடிய நபர் என்றும், இவர் மீது முன்பே காவல் நிலையங்களில் சில வழக்குகள் நடந்து வருவதும் தெரியவந்தது.

இவருக்கு உதவியாக இருந்த துரைசாமி அண்ணா மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருவது உறுதிசெய்யப்பட்டது. செல்போன் திருட்டில் பிடிப்பட்ட இருவரும் 19வயதான இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...