கிணத்துக்கடவு அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!

கோவையை அடுத்த கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் 74 வது குடியரசு தினம் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு, 74 வது குடியரசு தினம், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் கொண்டாடப்பட்டது.

நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது,

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.



கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் ஆய்வாளர் செந்தில்குமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தார்.



இதை போல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மல்லிகா தேசியக்கொடி ஏற்றினார். இதில் வருவாய் துறை பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நாகராணி தேசிய கொடியை ஏற்றினார். இதில் ஒன்றிய துணைத் தலைவர் துரைசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், சிக்கந்தர் பாட்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...