பல்லடம் அருகே பேருந்து-லாரி மோதல் - ஒட்டுநர் காயம்

பல்லடம் அருகே அரசு சொகுசு பேருந்து மீது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி மோதிய விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.



திருப்பூர்: பொங்கலூர் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரியும், சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு ஏற்றிய லாரி ஒன்று கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதேபோல் கோவையில் இருந்து கரூருக்கு அரசு சொகுசு பேருந்து 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.



பேருந்தினை ஓட்டுநர் கருணாகரன் ஓட்டி வந்தார்.பொங்கலூர் அருகே வந்த போது அரசு சொகுசு பேருந்து மீது எதிரே வந்த சரக்கு லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியது. இதில் பேருந்தின் இடது புறம் முழுவதும் சேதமடைந்தது.

இதனால் பேருந்தின் இறங்கும் வழி கதவுகள் திறக்க முடியாமல் போனது.லாரி ஓட்டுநருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தினை பார்த்த அவ்வழியாகச் சென்றவர்கள் அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை அவசரக் கால கதவு வழியாகக் கீழே இறக்கினர். மேலும் காயமடைந்த லாரி ஓட்டுநரை ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி விட்டு, தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைச் சீர் செய்தனர்.

இந்த விபத்தில் பேருந்தில் வந்த பயணிகள் அனைவரும் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...