பல்லடம் அருகே பேருந்து-லாரி மோதல் - ஒட்டுநர் காயம்

பல்லடம் அருகே அரசு சொகுசு பேருந்து மீது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி மோதிய விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.



திருப்பூர்: பொங்கலூர் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரியும், சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு ஏற்றிய லாரி ஒன்று கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதேபோல் கோவையில் இருந்து கரூருக்கு அரசு சொகுசு பேருந்து 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.



பேருந்தினை ஓட்டுநர் கருணாகரன் ஓட்டி வந்தார்.பொங்கலூர் அருகே வந்த போது அரசு சொகுசு பேருந்து மீது எதிரே வந்த சரக்கு லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியது. இதில் பேருந்தின் இடது புறம் முழுவதும் சேதமடைந்தது.

இதனால் பேருந்தின் இறங்கும் வழி கதவுகள் திறக்க முடியாமல் போனது.லாரி ஓட்டுநருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தினை பார்த்த அவ்வழியாகச் சென்றவர்கள் அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை அவசரக் கால கதவு வழியாகக் கீழே இறக்கினர். மேலும் காயமடைந்த லாரி ஓட்டுநரை ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி விட்டு, தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைச் சீர் செய்தனர்.

இந்த விபத்தில் பேருந்தில் வந்த பயணிகள் அனைவரும் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...