பல்லடம் அருகே பேருந்து-லாரி மோதல் - ஒட்டுநர் காயம்

பல்லடம் அருகே அரசு சொகுசு பேருந்து மீது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி மோதிய விபத்தில் பேருந்தில் பயணித்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.



திருப்பூர்: பொங்கலூர் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரியும், சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு ஏற்றிய லாரி ஒன்று கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதேபோல் கோவையில் இருந்து கரூருக்கு அரசு சொகுசு பேருந்து 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.



பேருந்தினை ஓட்டுநர் கருணாகரன் ஓட்டி வந்தார்.பொங்கலூர் அருகே வந்த போது அரசு சொகுசு பேருந்து மீது எதிரே வந்த சரக்கு லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியது. இதில் பேருந்தின் இடது புறம் முழுவதும் சேதமடைந்தது.

இதனால் பேருந்தின் இறங்கும் வழி கதவுகள் திறக்க முடியாமல் போனது.லாரி ஓட்டுநருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தினை பார்த்த அவ்வழியாகச் சென்றவர்கள் அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை அவசரக் கால கதவு வழியாகக் கீழே இறக்கினர். மேலும் காயமடைந்த லாரி ஓட்டுநரை ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி விட்டு, தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைச் சீர் செய்தனர்.

இந்த விபத்தில் பேருந்தில் வந்த பயணிகள் அனைவரும் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...