சீட்டாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஆத்திரம் - நண்பர்களைக் கடத்தி நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டிய 7 பேர் கைது!

பல்லடம் அருகே சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஆத்திரத்தில் நண்பர்களை கடத்தி நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய 7 பேர் கைது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நண்பர்களை கடத்தி நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடத்தை அடுத்த அருள்புரம் பகுதியை சேர்ந்த பிரபாகர்(வயது30), அங்குள்ள பனியன் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தனது நண்பர்களான பிரகாஷ்(வயது38) மற்றும் மனோஜ்(வயது26) ஆகியோருடன் வீட்டில் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில், பிரபாகரின் நண்பர் உசிலம்பட்டியை சேர்ந்த மாசாணம்(வயது30) என்பவரும் சூதாட்டத்தில் பணம் வைத்து விளையாடியுள்ளார்.

சீட்டாட்டத்தில் அதிக அளவு பணத்தை இழந்ததால் ஆத்திரம் அடைந்த மாசாணம், தனது நண்பர்களான தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராஜா(வயது25), துரைபாண்டி(வயது22) மற்றும் மருதுபாண்டி(வயது22), திருவள்ளூரை சேர்ந்த மகேஷ்(வயது42), சென்னை அண்ணா நகரை சேர்ந்த மணிகண்டன்(வயது31), திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த பரத்குமார்(வயது 25) ஆகியோருடன் சென்று பிரபாகர் மற்றும் அவரது நண்பர்கள் பிரகாஷ் மற்றும் மனோஜ் ஆகியோரை சரமாரியாக தாக்கி மாசாணம் வீட்டிற்கு காரில் கடத்திச்சென்றுள்ளனர்.

பின்னர், அங்கு வைத்து மூவரையும் அடித்து உதைத்து சித்தரவதை செய்ததோடு நிர்வாணமாக்கி வீடியோவும் எடுத்துள்ளனர். ஐந்து லட்சம் பணம் கேட்டு அவர்களை மிரட்டியதோடு தரமறுத்தால் வீடியோவை வெளியிடப் போவதாகவும் மிரட்டி அனுப்பியுள்ளனர்.

அங்கிருந்து தப்பி வந்த பிரகாஷ், பல்லடம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்த போலீசார், மாசாணம் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.



பின்னர் கைது செய்யப்பட்ட 7 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...