உடுமலை உழவர் சந்தையில் விற்பனைக்கு வந்த வினோத கேரட்! - பொதுமக்கள் ஆச்சரியம்..!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் செயல்பட்டுவரும் உழவர் சந்தைக்கு இன்று விற்பனைக்கு வந்த வினோதமான கேரட்டை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தைக்கு உடுமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகளை அதிகாலையில் தங்களது விளை நிலங்களில் விளைவித்த காய்கறிகளை கொண்டுவந்து விற்பனை செய்து வருகின்றனர்.



இந்த நிலையில், உடுமலை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கேரட் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வந்த நிலையில் இரண்டு கேரட்கள் மட்டும் சற்று வித்தியாசமாக காணப்பட்டது.

அதாவது, இரண்டு கேரட்டு ஒன்றோடு ஒன்று பிணைந்து, இரு மனிதர்கள் ஒன்றிணைந்து இருப்பது போன்று காணப்பட்டது. இந்த வினோத கேரட்டை, உழவர் சந்தைக்கு வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

மேலும், அந்த கேரட்டை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் விவசாயிகள் பதிவிட்ட நிலையில், தற்போது அந்தப் புகைப்படம் வேகமாக வைரலாகி வருகிறது.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...