உடுமலையில் தொழிலதிபர் வீட்டில் 120 பவுன் நகைக் கொள்ளை - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தொழிலதிபர் வீட்டின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் 120 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசித் தேடிவருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி நாராயணபதி. அட்டை பெட்டி தயாரிக்கும் கம்பெனி நடத்திவரும் இவர், நேற்று காலை குடும்பத்தினருடன் உறவினர் இல்ல விசேஷத்தில் கலந்து கொள்ள வெளியூர் சென்றுவிட்டார்.



நேற்று நள்ளிரவில் வீடு திரும்பியபோது, வீட்டின் ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு, பீரோக்களில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டிருந்தது கண்டு லட்சுமிநாராயணபதி அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து, உடுமலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தியதில், வீட்டினுள் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 120 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கபட்டிருப்பது தெரியவந்தது.



கொள்ளை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த உடுமலை காவல்துறையினர், தனிப்படைகள் அமைத்து, மர்ம நபர்களை தீவிரமாகத் தேடிவருகின்றன்ர். தொழிலதிபர் வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து 120 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...