குடியரசு தினக் கொண்டாட்டம் - கோவை போலீசார் ஒத்திகை அணிவகுப்பு!

கோவையில் குடியரசு தினத்தை முன்னிட்டு காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் காவலர்களின் ஒத்திகை அணிவகுப்பு நடைபெற்றது.


கோவை: குடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் அரசு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அதில், குறிப்பாக, இராணுவம் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் இடம்பெறும்.



இந்நிலையில், குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, கோவை மாவட்டத்தில் குடியரசு தின விழா வஉசி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. அதனையொட்டி, கோவை மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.



இதற்கான ஒத்திகை, காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.



இதில், சுமார் 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பங்கேற்றனர். இங்கு, அணிவகுப்பு தொடங்கப்படுவதில் இருந்து தேசிய கொடிக்கு மாவட்ட ஆட்சியருக்கும் மரியாதை செலுத்துவது, மாவட்ட ஆட்சியர் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்ளும்போது பின்பற்ற வேண்டியவை உட்பட அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒத்திகை பார்க்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...