முதல்வர் மீது அவதூறு கருத்து - சவுக்கு சங்கர் மீது கோவை காவல்நிலையத்தில் புகார்!

அரசு அதிகாரிகளை மிரட்டும் தோரணையில் பேசும் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார்.


கோவை: தமிழ்நாடு முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு கருத்துக்களைப் பரப்பி வரும் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் புகார் அளித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த திமுக பிரமுகரும், திரைப்பட இயக்குநருமான ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.



அதில், தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் குறித்து சமீப காலமாகச் சவுக்கு சங்கர் என்பவர் அவதூறான கருத்துக்களையும், போலியான ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து சமூக வலைத்தளத்தில் பேசி, பரப்பி வருவதாகவும், தனிப்பட்ட நபர்களின் தகவல்களை வெளியிட்டு வருவதாகவும், இம்மாதிரி தமிழக முதல்வர் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளைக் கூறிவரும் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர்ந்து அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துக்களையும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் சவுக்கு சங்கர் கூறி வருவதாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளையே அவர் மிரட்டும் தோரணையில் பேசி வீடியோ வெளியிடுவதாகவும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தனிப்பட்ட நபர்களின் சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றைக் குறித்தும் அவர் தேவையற்ற விமர்சனங்களைச் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இம்மாதிரியான அவதூறான விமர்சனங்களைச் செய்து வரும் சவுக்கு சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...