'மேட்டுப்பாளையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் நந்தவனம் மேம்படுத்தப்படும்..!' - ஆ.ராசா எம்.பி., தகவல்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பவானி ஆற்றில் ஈமகாரியங்கள் செய்யும் நந்தவனத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இரண்டு நாட்கள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை அவர் ஆய்வு செய்தார்.



நகராட்சி பகுதியில் உள்ள வசந்தம் நகரில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் யோகா பயிற்சி மையத்தை, ஆ.ராசா மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.



மேலும், மணிநகர் அரசுப்பள்ளி அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவு சார் மையத்தின் கட்டுமான பணிகள் மற்றும் நீரேற்று நிலையத்தினையும் அவர் ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, பழுதடைந்துள்ள நெல்லித்துரை சாலை மற்றும் மேட்டுப்பாளையத்தில் முன்னோர்களுக்கு பவானி ஆற்றில் தர்ப்பணம் கொடுக்கவும், ஈம காரியங்கள் செய்ய அனைத்து இந்து சமுதாய நலச்சங்கம் நிர்வகிக்கும் நந்தவனம் பகுதியினை ஆய்வு மேற்கொண்டு அங்கு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது, நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கை வைத்த நிலையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய படித்துறை கட்டுதல், கழிவறை, குளிப்பதற்கு குளியல் அறை போன்றவற்றை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆ.ராசா அப்போது உறுதியளித்தார்.

அதேபோல், மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோவில் சாலை நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் உள்ளதால், அதனையும் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.



இதனைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சியில் ஆ.ராசா கலந்துகொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது மேட்டுப்பாளையம் வட்டாட்சியர், நகர்மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன், துனை தலைவர் அருள்வடிவு மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...