உடுமலையில் பழுதாகி பாதியில் வழியில் நிற்கும் அரசுப்பேருந்துகள் - பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் பழுதாகி அடிக்கடி பாதியில் வழியிலேயே நிற்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு இடங்களில் போதிய பராமரிப்பு இல்லாததால் அரசு பஸ்கள் ஆங்காங்கே பழுதாகி நிற்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இன்றைய கால கட்டத்தில் அனைத்து வீடுகளிலும் இருசக்கர வாகனம் உள்ளது. ஆனால், அவற்றுக்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய ஒருநாள் வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதியை செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. அந்த அளவுக்கு பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்ந்துவிட்டது. எனவே, பொது போக்குவரத்தை நம்பி ஏழை, நடுத்தர குடும்ப மக்கள் அதிக அளவில் இருந்துவருகின்றனர்.

குறிப்பாக, தமிழ்நாடு அரசின் டவுன் பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம் என்பது அரசுப்பேருந்துக்கான மவுசை அதிகப்படுத்தியுள்ளது. அதேபோல், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் செல்லவும் அரசுப் பேருந்துகளே பெருமளவில் உதவியாக இருந்துவருகிறது.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் போதிய பராமரிப்பு செய்யப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. போக்குவரத்துறை அதிகாரிகளின் இந்த அலட்சியம் காரணமாக, கிராமப் பகுதிகளில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள், ஆங்காங்கே பழுதாகி நின்று விடுகிறது.



அந்த வகையில், இன்று அமராவதியை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பழுதாகி போடிபட்டி அருகே நின்றுவிட்டது.இதனால், பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். பின்னர் நீண்ட நேரத்துக்கு பின்பு மாற்று பேருந்துகள் மூலம் அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:

கிராமங்களில் வசித்து வருகின்ற பல தரப்பட்ட மக்கள், போக்குவரத்துக்காக பெரிதும் நம்பியிருப்பது அரசு பேருந்துகளைத்தான். ஆனால் அவற்றை முறையாக பராமரிப்பதற்கு உடுமலை கிளை நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் பேருந்துகள் பழுதாகி ஆங்காங்கே நின்று விடுவது வாடிக்கையாக உள்ளது.

பஸ்களின் உள்புறத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால், பேருந்திற்குள் படியும் மண் மற்றும் தூசுகள் பொதுமக்களுக்கு உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே, உடுமலை கிளையில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்களை முறையாக பராமரித்து பயணிகளுக்கு தங்கு தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...