கோவை அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவினர் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்


அ.தி.மு.க  பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே தற்போது அதிகாரப்போட்டி நிலவி வருகிறது.

அ.தி.மு.க -வில் ஒரு பிரிவினர் சசிகலாவிற்கும், மற்றொரு பிரிவினர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அ.தி.மு.க  வழக்கறிஞர்கள் பிரிவினர் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக கோவை மாவட்ட நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அடிமட்ட தொண்டனாக இருந்து படிப்படியாக உயர்ந்தவர் எனவும், ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து முதலமைச்சராக பணியாற்ற உறுதுணையாக இருப்போம் எனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மேலும், அ.தி.மு.க  சட்டமன்ற உறுப்பினர்கள் நெருக்கடியான சூழலில் விடுதிகளில் அடைத்து வைத்திருப்பதாகவும், அவர்களும் விரைவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிப்பார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...