கோவையில் பெண்களுக்கு 'வாரிசு' பட ஸ்பெஷல் ஷோ - விஜய் மக்கள் இயக்கத்தினர் அசத்தல்

கோவை சாவடி பகுதியில் கவிதா சினிமாஸ் திரையரங்கில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் பெண்களுக்கென வாரிசு பட சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.


கோவை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினர் "வாரிசு" பட வெற்றியை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தலின்படி தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மதுக்கரை ஒன்றிய இளைஞரணி துணை செயாலாளர் ரமேஷ் ஏற்பாட்டில், சாவடி பகுதியில் அமைந்துள்ள கவிதா சினிமாஸ் திரையரங்கில் வாரிசு படத்திற்கு பெண்களுக்கென பிரத்யேக காட்சியை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட இளைஞரணி தலைவர் யுவராஜ், மாணவரணி தலைவர் பாபு,தொண்டரணி தலைவர் விக்கி ஆகியோர் கலந்து கொண்டு, படம் பார்க்க வந்த பெண்களை வரவேற்றனர்.



பெண்களின் பெரும் வரவேற்பை பெற்ற "வாரிசு" படத்தை நூற்றுக்கணக்கான பெண்கள் ஆர்வத்துடன் பார்த்துரசித்தனர்.



இதில், தொண்டரணி அருண் ஈஸ்வர் இளைஞரணி நிர்வாகிகள் மணிகண்டன், மகேஸ்வரன், ப்ரியமுடன் சிவா, மதுக்கரை ஒன்றிய தலைவர் நாகராஜ், செயலாளர் தளபதிமுருகேஷ், கிணத்துக்கடவு ஒன்றிய தலைவர் நாகராஜ், கல்லபுரம் பழனிச்சாமி, தொண்டமுத்தூர் வெள்ளச்சாமி, மதுக்கரை விமல், திருமலையம்பாளையம் அய்யாசாமி, சாவடி சக்திவேல் மற்றும் மகளிரணி நிர்வாகிகள், தலைவர் மகாலட்சுமி, செயலாளர் காளீஸ்வரி, வெண்ணிலா, ஈஸ்வரி, வேலுமணி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...