குடியிருப்பு பகுதிகளுக்கு பட்டா வழங்கக் கோரி அண்ணாநகர் பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டம், சிங்காநல்லூர் அருகே அமைந்துள்ள அண்ணாநகர் பகுதி மக்கள் தங்களது குடியிருப்பு பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும் என இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் அருகே அண்ணா நகர் பகுதியில் பல ஆண்டுகளாக நாங்கள் வசித்து வருகிறோம். மேலும், நாங்கள் மிகவும் வறுமையில் வாடி வருவதோடு எங்களுக்கு சொந்தமாக எவ்வித இருப்பிடமும் இல்லாமல் உள்ளோம். 

மேலும், நாங்கள வசிக்கும் குடியிருப்புகளுக்கு மின்சார வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. 

இந்நிலத்தில் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வந்தோம்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 10ம் தேதியன்று கோவை மாவட்ட நொய்யல் கிழக்குப் பிரிவு உதவிப்பொறியாளர் எங்களுடைய இடத்தினை 21 நாட்களுக்குள் காலிசெய்ய வேண்டும் என அறிவிப்பு கடிதம் கொடுத்தார்.

எங்களுக்கு இதைவிட்டால் வேறு  குடியிருப்புகள் கிடையாது. எனவே நாங்கள் தற்போது வசிக்கும் பகுதியில் வீடுகளுக்கான பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...