கோவை இடையர்பாளையத்தில் கேரள லாட்டரிகள் விற்பனை - ஒருவர் கைது

கோவை இடையர்பாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை துடியலூர் போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை துடியலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை சிலர் விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இடையர்பாளையம் பகுதியில் துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குருசந்திர வடிவார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அங்குள்ள மகாலட்சுமி பேக்கரி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு லாட்டரி டிக்கெட்டுகளை ஒரு நபர் விற்பனை செய்துவந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து லாட்டரி டிக்கெட்டுகள், 1200 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சண்முகத்தை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...