கோவை இடையர்பாளையத்தில் கேரள லாட்டரிகள் விற்பனை - ஒருவர் கைது

கோவை இடையர்பாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரை துடியலூர் போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை துடியலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட்டுகளை சிலர் விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இடையர்பாளையம் பகுதியில் துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் குருசந்திர வடிவார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அங்குள்ள மகாலட்சுமி பேக்கரி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டு லாட்டரி டிக்கெட்டுகளை ஒரு நபர் விற்பனை செய்துவந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து லாட்டரி டிக்கெட்டுகள், 1200 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சண்முகத்தை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...