உடுமலை வழியாக 20 வருடங்களுக்கு முன்பு இயங்கிய ரயிலை இயக்க கோரிக்கை!

உடுமலை வழியாக 20 வருடங்களுக்கு முன்பு மீட்டர்கேஜ் பாதையின் போது இயங்கிய ரயில்கள் இயக்கும்படி தென்னக ரயில்வே-க்கு பொதுமக்கள் கோரிக்கை.


திருப்பூர்: கோவை-திண்டுக்கல் இடையே 20 வருடங்களுக்கு முன் மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்த காலத்தில் இயங்கிய ரயிலை மீண்டும் இயக்கினால் சுமார் 70 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக 20 வருடங்களுக்கு முன் மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்த காலத்தில் கோவை-திண்டுக்கல் இடையே வெற்றிகரமாக ஓடிய பயணிகள் ரயில் சேவையை மீண்டும் துவக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த ரயில் இயக்கப்படுவதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கும் விவசாயிகள், மாணவர்கள், தினசரி பயணிக்கும் பயணிகள், வணிகர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் இந்த ரயில் இடைப்பட்ட நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து சென்னை, பெங்களூர், ஐதராபாத், கொச்சி மற்றும் பல நகரங்களுக்குக் கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் வழியாக இரு மார்க்கங்களிலும் செல்வதற்கு வழி வகுக்கும்.

இந்த வழித்தடத்தில் உள்ள பதினான்கு ரயில் நிலையங்களை பயன்படுத்துவதன் மூலம் சுமார் 70 லட்சம் பேர் பயனடைவர். இதன் மூலம் ரயில்வே துறைக்கு நல்ல வருவாய் கிடைப்பதுடன், பயணிகள் பாதுகாப்பாக ரயில்களில் பயணிக்க முடியும்.

இந்த வழித்தடத்தில் கோயம்புத்தூர், போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூர், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் உள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேலுச்சாமி, சண்முகசுந்தரம், பி.ஆர்.நடராஜன் மற்றும் எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், தாமோதரன், பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், மகேந்திரன், ஐ.பி. செந்தில்குமார். திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அமைச்சர் சக்கர பாணி ஆகியோர் ரயில் சேவையை உடனடியாக தொடங்குமாறு மத்திய அமைச்சர் ஸ்ரீஅஸ்வினி வைஷ்ணவிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இந்த ரயில் சேவையை விரைவில் மீண்டும் துவங்கி தென்னக ரயில்வேயின் மதுரை, பாலக்காடு, சேலம் ஆகிய 3 கோட்டங்களும் பொதுமக்களின் நலனுக்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் 4 பேர் கும்பல் தாக்கிய தொழிலாளி உயிரிழப்பு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் 3 நாட்களாக தீவிர சிக...

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...