கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றப்பின்னணியுடைய 64 பேர் கைது


தமிழகத்தில் தற்போது நிலவி வரும் நிலையில்லாத அரசியல் சூழல் காரணமாக பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இதனிடையே இந்த சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை ஏற்படுத்த சிலர் முயல்வதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் குற்றப்பின்னணி உடைய நபர்கள், ரவுடிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நபர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், அன்னூர், பொள்ளாச்சி, வால்பாறை, பெரியநாயக்கன்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் 63 பேரும், மாநகர பகுதியை சேர்ந்த ஒருவரையும் என மொத்தம் 64 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பலர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், சிலர் மீது குற்றப்பின்னணி உள்ளதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், காவல்துறையினரின் இந்த அதிரடி சோதனை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...