கோவையில் போதை மாத்திரைகள் விற்பனை - 3 பேர் கைது

கோவையில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் கைதான நிலையில், 208 போதை மாத்திரைகள், சிரஞ்சுகள் பறிமுதல்.


கோவை: மத்தம்பாளையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை தடுக்க மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள மத்தம்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களைப் பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர்.

இதையடுத்து அவர்களைச் சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள், சிரஞ்சுகள் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பிடிப்பட்ட நபர்கள் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவர்த்தனன்(23), பிரவீன்குமார் (21), நவீன்குமார் (21). என்பதும், இவர்கள் அப்பகுதி இளைஞர்களைக் குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சா மற்றும் 280 போதை மாத்திரைகள் சிரஞ்சுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...