உடுமலையில் பொரியல் தட்டைப் பயிர் மகசூல் அமோகம் - விவசாயிகள் மகிழ்ச்சி..!

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பொரியல் தட்டைப் பயிர் நல்ல மகசூல் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொரியல் தட்டை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தட்டை, இந்த பட்டத்தில் நல்ல மகசூல் கிடைத்துள்ளதோடு, நல்ல விலையும் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளது.

இதுகுறித்து தட்டை சாகுபடி விவசாயிகளிடம் கேட்டபோது, பொரியல் தட்டையை அனைத்து வகையான நிலங்களிலும், அனைத்து பருவத்திலும் சாகுபடி செய்யலாம். உடுமலை பகுதியில் இந்தப் பயிர் நல்ல மகசூல் கொடுக்கிறது. ஏக்கருக்கு நாளொன்றுக்கு 100 முதல் 150 கிலோ வரை அறுவடை செய்கிறோம்.

சாகுபடிக்கு ஏக்கருக்கு 15,000 முதல் 20 ஆயிரம் வரை செலவு ஆகிறது. ஒரு ஏக்கருக்கு ஆறு முதல் பத்து டன் வரை மகசூல் கிடைக்கிறது. இந்தப் பொரியல் தட்டையின் விலை கிலோ ஒன்று ரூ.15 முதல் ரூ.30 வரை இருப்பதாலும், இந்த விலை நிலையாக இருப்பதாலும் விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டுவருகின்றனர் என்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...