உடுமலையில் பொரியல் தட்டைப் பயிர் மகசூல் அமோகம் - விவசாயிகள் மகிழ்ச்சி..!

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பொரியல் தட்டைப் பயிர் நல்ல மகசூல் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொரியல் தட்டை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தட்டை, இந்த பட்டத்தில் நல்ல மகசூல் கிடைத்துள்ளதோடு, நல்ல விலையும் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளது.

இதுகுறித்து தட்டை சாகுபடி விவசாயிகளிடம் கேட்டபோது, பொரியல் தட்டையை அனைத்து வகையான நிலங்களிலும், அனைத்து பருவத்திலும் சாகுபடி செய்யலாம். உடுமலை பகுதியில் இந்தப் பயிர் நல்ல மகசூல் கொடுக்கிறது. ஏக்கருக்கு நாளொன்றுக்கு 100 முதல் 150 கிலோ வரை அறுவடை செய்கிறோம்.

சாகுபடிக்கு ஏக்கருக்கு 15,000 முதல் 20 ஆயிரம் வரை செலவு ஆகிறது. ஒரு ஏக்கருக்கு ஆறு முதல் பத்து டன் வரை மகசூல் கிடைக்கிறது. இந்தப் பொரியல் தட்டையின் விலை கிலோ ஒன்று ரூ.15 முதல் ரூ.30 வரை இருப்பதாலும், இந்த விலை நிலையாக இருப்பதாலும் விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டுவருகின்றனர் என்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...