உடுமலையில் பொரியல் தட்டைப் பயிர் மகசூல் அமோகம் - விவசாயிகள் மகிழ்ச்சி..!

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பொரியல் தட்டைப் பயிர் நல்ல மகசூல் கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொரியல் தட்டை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தட்டை, இந்த பட்டத்தில் நல்ல மகசூல் கிடைத்துள்ளதோடு, நல்ல விலையும் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளது.

இதுகுறித்து தட்டை சாகுபடி விவசாயிகளிடம் கேட்டபோது, பொரியல் தட்டையை அனைத்து வகையான நிலங்களிலும், அனைத்து பருவத்திலும் சாகுபடி செய்யலாம். உடுமலை பகுதியில் இந்தப் பயிர் நல்ல மகசூல் கொடுக்கிறது. ஏக்கருக்கு நாளொன்றுக்கு 100 முதல் 150 கிலோ வரை அறுவடை செய்கிறோம்.

சாகுபடிக்கு ஏக்கருக்கு 15,000 முதல் 20 ஆயிரம் வரை செலவு ஆகிறது. ஒரு ஏக்கருக்கு ஆறு முதல் பத்து டன் வரை மகசூல் கிடைக்கிறது. இந்தப் பொரியல் தட்டையின் விலை கிலோ ஒன்று ரூ.15 முதல் ரூ.30 வரை இருப்பதாலும், இந்த விலை நிலையாக இருப்பதாலும் விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டுவருகின்றனர் என்றனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...