உடுமலை அருகே ஆல்கொண்டமால கோவிலில் விவசாயிகள் சிறப்பு வழிபாடு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காணும் பொங்கலை முன்னிட்டு ஆல்கொண்ட மால கோவிலில் விவசாயிகள் சிறப்பு வழிபாடு.


திருப்பூர்: உடுமலை அருகே காணும் பொங்கலை முன்னிட்டு ஆல்கொண்ட மால கோவிலில், கால்நடைகள் நலமாக வாழ உருவ பொம்மை வைத்தும் தேவாரட்டம் ஆடியும் விவசாயிகள் சிறப்பு வழிபாடு செய்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சோமவாரப்பட்டியில் உள்ள ஆல்கொண்ட மால கோவிலில் காணும் பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு விவசாயிகள் தங்களது கால்நடைகள் நீண்ட காலமாக நலமுடன் வாழ பசு உருவ பொம்மை வைத்து நேர்த்திக்கடன் செய்து சிறப்பு வழிபாடு செய்தனர்.



முன்னோர்கள் கூறிய அறிவுரையின்படி பல ஆண்டுகளாக கால்நடைகள் நலமாய் வாழ உருவ பொம்மை வைத்து வழிபாடு செய்தால் கால்நடைகள் நீடுழி வாழ இறைவன் கை கொடுப்பார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.



மேலும், இதற்கிடையில் பாரம்பரியமான சலகெருது ஆட்டம், உருமி இசையுடன் தேவாராட்டம் ஆடி சிறப்பு வழிப்பாட்டில் ஈடுபட்டனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலிருந்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் ஆய்வு; நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சரத்குமார்

கோவை முன்னாள் படைவீரர்கள் அலுவலகத்தில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் ஆய்வு மேற்கொண்டு, முன்னாள் ப...