கோவை டூ சார்ஜாவுக்கு விமானம் மூலம் 7 டன் கரும்பு, மஞ்சள், வெல்லம் ஏற்றுமதி!

கோவையிலிருந்து பொங்கல் பண்டிகைக்காக சார்ஜாவுக்கு கடந்த 5 நாட்களில் 7 டன் கரும்பு, மஞ்சள், வெல்லம் சார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.


கோவை: தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தை முதல் நாளான்று பொங்கல் பண்டிகை கொண்டாட்டப்பட்டுவருகிறது. பொங்கல், கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் வழிபாட்டின் பிரதானப் பொருட்கள். அந்த வகையில், இந்த ஆண்டு, கோவையிலிருந்து சார்ஜாவுக்கு விமானம் மூலம் கரும்பு, வெல்லம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்தில் 5 நாட்கள் சார்ஜாவுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 5 நாட்களில் கோவையிலிருநது ஏழு டன் அளவுக்கு, பொங்கல் பண்டிக்கைக்கான கரும்பு, மஞ்சள் வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, பொங்கல் பண்டிகை முன்னிட்டு கரும்பு மஞ்சள், வாழை இலை, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு புக்கிங் செய்யப்பட்டு ஷார்ஜா செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த 5 நாட்களில் மொத்தம் 15 டன் எடையிலான சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில், 5 டன் கரும்பு மற்றும் 2 டன் வெல்லம், மஞ்சள், வாழை இலை உள்ளிட்ட பொருட்கள் அடங்கும். இந்த பொருட்கள், மதுரை, தேனி, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்கு கொண்டுவரப்பட்டு, இங்கிருந்து விமானம் மூலம் ஷார்ஜாவுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...