கோவையில் பைக் மீது கார் மோதல் - பெண் படுகாயம்

கோவை சங்கனூர் சாலை பிரிவு பகுதியில் பைக் மீது கார் மோதியதில் பெண் படுகாயம்.


கோவை: கோவை சங்கனூர் ரோடு பிரிவு பகுதியில் பள்ளியிலிருந்து குழந்தையைச் சென்ற பைக் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் பெண் படுகாயமடைந்தார். விபத்து குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சத்யபிரியா. இவர் சங்கனூர் சாலை பிரிவு அருகே உள்ள பள்ளியிலிருந்து தனது குழந்தையை அழைத்துக் கொண்டு பைக்கில் வாகனத்தில் வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் சத்யபிரியா சென்ற பைக் மீது மோதியுள்ளது. இதில் சத்யபிரியா தூக்கிவீசப்பட்டுப் படுகாயமடைந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் சத்யபிரியாவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...