கோவையில் நடைபெற்ற மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் - இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இணைந்து கொண்டாட்டம்

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பில் கோவையில் நடைபெற்ற மதநல்லிணக்க சமத்துவ பொங்கல் விழாவில் அனைத்து மதத்தினர் பங்கேற்றது மட்டுமல்லாமல், உலக அமைதி வேண்டி சமாதான புறாக்களை பறக்க விட்டனர்.



கோவை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் கோவையில் மதநல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.



பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக கொண்டாடப்பட்ட இந்த பொங்கல் விழாவில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் என பலரும் பங்கேற்று பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஹாஜி முகமது ரபி ஏற்பாட்டில் கோவை பேரூர் ஆதின வளாகத்தில் நடைபெற்ற இந்த மத நல்லிணக்க பொங்கல் விழாவில், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ பிரதிநிதிகள் மற்றும் கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த பொங்கல் விழாவில், உலக அமைதி வேண்டி சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்க மூன்று சமாதான புறாவை பறக்க விட்டனர்.



பின்னர் விளையாட்டு போட்டியில் சிறந்து விளங்கிய மாணவ மாணவியருக்கும், சிறந்த சமூக சேவகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் பொங்கல் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள், சமூக சேவகர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.



தொடர்ந்து பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக ஏழை, எளிய குடும்ப பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.



பேரூர் ஆதின வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக மதங்களை கடந்து அனைத்து பிரிவினரும் கலந்து கொண்டனர்.

தமிழர் பண்டிகையான பொங்கல் மதம், மொழி கடந்த ஒரு பண்டிகையாகும். அதனடிப்படையில் இந்த மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டுள்ளது என்றும். இந்த முன்னெடுப்பு இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது எனவும் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...