கோவையில் நடைபெற்ற மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் - இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இணைந்து கொண்டாட்டம்

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பில் கோவையில் நடைபெற்ற மதநல்லிணக்க சமத்துவ பொங்கல் விழாவில் அனைத்து மதத்தினர் பங்கேற்றது மட்டுமல்லாமல், உலக அமைதி வேண்டி சமாதான புறாக்களை பறக்க விட்டனர்.



கோவை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் கோவையில் மதநல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.



பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக கொண்டாடப்பட்ட இந்த பொங்கல் விழாவில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் என பலரும் பங்கேற்று பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஹாஜி முகமது ரபி ஏற்பாட்டில் கோவை பேரூர் ஆதின வளாகத்தில் நடைபெற்ற இந்த மத நல்லிணக்க பொங்கல் விழாவில், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ பிரதிநிதிகள் மற்றும் கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த பொங்கல் விழாவில், உலக அமைதி வேண்டி சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்க மூன்று சமாதான புறாவை பறக்க விட்டனர்.



பின்னர் விளையாட்டு போட்டியில் சிறந்து விளங்கிய மாணவ மாணவியருக்கும், சிறந்த சமூக சேவகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் பொங்கல் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள், சமூக சேவகர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.



தொடர்ந்து பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக ஏழை, எளிய குடும்ப பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.



பேரூர் ஆதின வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக மதங்களை கடந்து அனைத்து பிரிவினரும் கலந்து கொண்டனர்.

தமிழர் பண்டிகையான பொங்கல் மதம், மொழி கடந்த ஒரு பண்டிகையாகும். அதனடிப்படையில் இந்த மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டுள்ளது என்றும். இந்த முன்னெடுப்பு இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது எனவும் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...