கோவையில் நடைபெற்ற மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் - இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இணைந்து கொண்டாட்டம்

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பில் கோவையில் நடைபெற்ற மதநல்லிணக்க சமத்துவ பொங்கல் விழாவில் அனைத்து மதத்தினர் பங்கேற்றது மட்டுமல்லாமல், உலக அமைதி வேண்டி சமாதான புறாக்களை பறக்க விட்டனர்.



கோவை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் கோவையில் மதநல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.



பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக கொண்டாடப்பட்ட இந்த பொங்கல் விழாவில் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் என பலரும் பங்கேற்று பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஹாஜி முகமது ரபி ஏற்பாட்டில் கோவை பேரூர் ஆதின வளாகத்தில் நடைபெற்ற இந்த மத நல்லிணக்க பொங்கல் விழாவில், இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ பிரதிநிதிகள் மற்றும் கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த பொங்கல் விழாவில், உலக அமைதி வேண்டி சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்க மூன்று சமாதான புறாவை பறக்க விட்டனர்.



பின்னர் விளையாட்டு போட்டியில் சிறந்து விளங்கிய மாணவ மாணவியருக்கும், சிறந்த சமூக சேவகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் பொங்கல் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள், சமூக சேவகர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.



தொடர்ந்து பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக ஏழை, எளிய குடும்ப பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.



பேரூர் ஆதின வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக மதங்களை கடந்து அனைத்து பிரிவினரும் கலந்து கொண்டனர்.

தமிழர் பண்டிகையான பொங்கல் மதம், மொழி கடந்த ஒரு பண்டிகையாகும். அதனடிப்படையில் இந்த மத நல்லிணக்க சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டுள்ளது என்றும். இந்த முன்னெடுப்பு இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது எனவும் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...