கேரளாவுக்கு போதைப் பொருள் கடத்திய கும்பல் கைது - போலீசாரை நேரில் அழைத்து பாராட்டிய கோவை சரக டிஐஜி!

நீலகிரி வழியாக கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பிடிக்க உதவிய தலைமை காவலர் மகேஷை கோவை சரக டிஐஜி விஜயகுமார், நேரில் அழைத்து பாராட்டினார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல் நிலைய தலைமை காவலர் மகேஷ். இவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கூடலூர் வழியாக தமிழக பதிவெண் கொண்ட லாரியில், பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கு இடையே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக காவலர் மகேஷ்-க்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து அவர், கூடலூர் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார், தொரப்பள்ளி சோதனை சாவடியில் குறிப்பிட்ட லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.



இந்த சோதனையில் அந்த லாரியில் கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த 40 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பிடிக்க உதவிய காவலர் மகேஷை கோவை சரக டிஐஜி விஜயகுமார், நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...