கோவை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - இருவர் கைது

கோவை விமான நிலையத்தில் பேண்ட் பாக்கெட்டில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தவர்கள் கைது



கோவை: கோவை விமான நிலையத்திற்கு சார்ஜாவிலிருந்து வந்த பயணிகள் இருவர் தங்கக் கடத்தலில் ஈடுபட்டது சோதனையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 3.54 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை: கோவை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் தங்கக் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சார்ஜாவிலிருந்து கோவை விமான நிலையத்திற்குப் பயணிகள் விமானம் ஒன்று வந்தது. இதில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இருவர் தாங்கள் அணிந்திருந்த பேண்ட் பாக்கெட்டில் தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் கடலூரைச் சேர்ந்த மணிகண்டன், திருச்சியைச் சேர்ந்த இப்ராகிம் என்பது தெரியவந்தது. இருவரிடமிருந்தும் ரூ.2.05 கோடி மதிப்பிலான3.54 கிலோ எடையுள்ள பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...