கோவை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் - இருவர் கைது

கோவை விமான நிலையத்தில் பேண்ட் பாக்கெட்டில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தவர்கள் கைது



கோவை: கோவை விமான நிலையத்திற்கு சார்ஜாவிலிருந்து வந்த பயணிகள் இருவர் தங்கக் கடத்தலில் ஈடுபட்டது சோதனையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 3.54 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை: கோவை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் தங்கக் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சார்ஜாவிலிருந்து கோவை விமான நிலையத்திற்குப் பயணிகள் விமானம் ஒன்று வந்தது. இதில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இருவர் தாங்கள் அணிந்திருந்த பேண்ட் பாக்கெட்டில் தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் கடலூரைச் சேர்ந்த மணிகண்டன், திருச்சியைச் சேர்ந்த இப்ராகிம் என்பது தெரியவந்தது. இருவரிடமிருந்தும் ரூ.2.05 கோடி மதிப்பிலான3.54 கிலோ எடையுள்ள பறிமுதல் செய்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...