பன்னீர் தயாரிப்பில் களமிறங்கும் கோவை ஆவின் - சிம்பிளிசிட்டி எக்ஸ்குளூசிவ்

கோவையில் செயல்பட்டுவரும் ஆவின் நிறுவனம் பன்னீர் தயாரிப்பில் களம் காணத் திட்டமிட்டுள்ளது. நடப்பு மாதம் முதல் நாளொன்றுக்கு 2 மெட்ரிக் டன் பன்னீர் தயாரிப்பதற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறது.


கோவை: பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் "ஆவின்"

கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய லிமிடெட் எனப்படும் ஆவின் நிறுவனம் பேரூர் பச்சாபாளையத்தில் இயங்கி வருகின்றது. ஆர்.எஸ்.புரத்தில் இதன் விற்பனைப்பிரிவு அலுவலகம் உள்ளது. இந்நிறுவனத்தில் 15,000-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். பால் வழங்கும் உறுப்பினர்கள் 8000-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

உற்பத்தியாளர்களிடம் இருந்து தினமும் 2 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.



பால் உற்பத்தியாளர்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை நேரடியாக நுகர்வோருக்கு சென்று சேர்க்க முடியாத நிலையில் நுகர்வோருக்கும் உற்பத்தியாளருக்கும் பாலமாக ஆவின் நிறுவனம் இயங்கி வருகின்றது.



நேரடியாக பால் விற்பனை செய்வதையும் கடந்து, பால் மூலம் தயாரிக்கப்படும் இனிப்புகள் உள்ளிட்ட இதர பொருட்களையும் விற்று பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் அரணாக ஆவின் விளங்கிவருகிறது.

நாள் ஒன்றுக்கு 2 மெட்ரிக் டன் பன்னீர் உற்பத்தி செய்ய திட்டம்

கோயம்புத்தூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் நடப்பு மாதம் முதல் பன்னீர் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை ஆவினில் பன்னீர் தயாரிக்க ஆவின் நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ.10 கோடி ரூபாய் நிதியைப் பயன்படுத்தி பன்னீர் தயாரிக்க தேவையான நவீன இயந்திரங்கள் வாங்கப்படவுள்ளன. நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஆட்டோமேட்டிக் மிஷின் மூலம் பன்னீர் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதன் மூலம் நாளொன்றுக்கு இரண்டு மெட்ரிக் டன் பன்னீர் தயாரிக்கவும் கோவை ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் "ஆவின்"

பன்னீர் தயாரிப்பதற்கான அடிப்படை மூலப் பொருள் பால் ஆகும். ஆயிரம் லிட்டர் பாலை வைத்து 140 கிலோ பன்னீர் தயாரிக்க முடியும் . இந்த நிலையில், நாள் ஒன்றுக்கு இரண்டு மெட்ரிக் டன் பன்னீர் உற்பத்தி செய்ய, சுமார் 14 ஆயிரம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. கோயம்புத்தூர் ஆவினுக்கு தற்போது நாளொன்றுக்கு 8000 முதல் 9000 லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் நிலையில், வழக்கத்தைவிட தோராயமாக இரண்டு மடங்கு கூடுதலாக பால் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது.

இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கையின் பேரில், ஆவினுக்கான பால் உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயரும். அதுமட்டுமின்றி கால்நடைகளில் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, வேளாண் தொழில் வளமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கோயமுத்தூர் ஆவின் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி, விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...